நாளை சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் பொன்னியின் செல்வனின் முதல் பாடல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

மிகப்பெரிய பிரம்மாண்ட கதையான ‘கல்கி புகழ் பெற்ற பொன்னியன் செல்வன் நாவலை’ அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் இயக்கி வரும் படம் தான் “பொன்னியின் செல்வன்-1”. இதில் முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம், கார்த்திக்,ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் பிரகாஷ்ராஜ், பிரபு போன்ற முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இப்படத்தின் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதியில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமான தகவலை படக்குழு ஏற்கனவே வெளியிட்டுள்ளது.

தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாக இருக்கும் இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து லைக்கா நிறுவனம் வழங்க உள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகும் இப்படத்தின் அப்டேட்களை பட குழு அவ்வப்போது அறிவித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடல் குறித்த தகவலை படக்குழு அறிவித்துள்ளது.

அதாவது பொன்னி நதி என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தின் முதல் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி நாளை மாலை 6 மணி அளவில் சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து பேசி இருக்கும் ஜெயம் ரவியின் வீடியோ பதிவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.