Ponniyin Selvan :
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் புதுப்புது இயக்குனர்கள் அறிமுகமாகும் தமிழ் சினிமாவில் அதில் வெகுசிலர் மட்டுமே தங்களுக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கி, காலம் கடந்தும் போற்றப்படுவார்கள்.
அந்தவகையில், தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியமைத்த மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் ‘மணிரத்னம்’.
இவர் செக்கச்சிவந்த வானம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக தனது கனவு படமான பொன்னியின் செல்வனை உருவாக்க தயாராகி வருகிறார்.
இதில் கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஷ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ், சத்யராஜ் என இந்திய அளவில் இருந்து பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள்.
பாகுபலி பாணியில் இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் பட்ஜெட் 800 கோடியில் இருந்து 1000 கோடியைத் தொடுமாம்.
இதன்மூலம் இந்தியாவில் அதிக பட்ஜெட்டில் தயாராகும் படம் எனும் சிறப்பு சாதனையை இப்படம் நிகழ்த்தவுள்ளது.
பாகுபலி படத்தை இயக்கிய, ராஜமவுலி அந்த படத்தை, 350 கோடியில் இயக்கி, ஷங்கர் படங்களின் சாதனையை முறியடித்தார்.
அதன்பின், 2.0 படத்தை, 550 கோடியில் இயக்கி, ராஜமவுலியின் சாதனையை முறியடித்தார் ஷங்கர்.
இப்படியான நிலையில், தற்போது, பொன்னியின் செல்வன் இந்த அனைத்து சாதனைகளையும் முறியடித்து முதலிடம் பிடிக்கவுள்ளது.