நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மீது பொலிசில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Police Complaint on Vignesh Shivan and Nayanthara : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இயக்குனர் விக்னேஷ் அவனை காதலித்து வரும் இவர் அவருடன் இணைந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கினார். இந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு ரவுடி பிக்சர்ஸ் என பெயர் வைத்துள்ளனர்.
இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தொடர்ந்து சில படங்களை தயாரித்து வருகிறார் நயன்தாரா. இந்த நிலையில் தற்போது தயாரிப்பு நிறுவனத்திற்கு ரவுடி பிக்சர்ஸ் என பெயர் வைப்பதா? ரவுடிகள் மீது காவல்துறை கடும் நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் இந்த தலைப்பு ரவுடிகளை ஊக்கப்படுத்துவது போல இருப்பதாக இந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.