வீட்டை விட்டு வெளியே வரும்போது கெத்தாக தான் வந்தா.. பார்வதிக்கு அவரது அம்மா புகழாரம்..!

Web Ads

பார்வதி குறித்து புகழ்ந்து பேசி உள்ளார் அவரது அம்மா.

Parvati's mother praises Parvati when she comes out of the house..!
Parvati’s mother praises Parvati when she comes out of the house..!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சியின் 9வது சீசன் கடந்த வாரம் முடிவுக்கு வந்தது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்களில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டவர் விஜே பார்வதி.

ஆரம்பம் முதலே இவருக்கு சில விமர்சனங்கள் இருந்தாலும் ஆதரவாகவும் பலர் இருந்து வந்தனர். ஆனால் கார் டாஸ்கின் போது சான்றாவை காரில் இருந்து எட்டி உதைத்து வெளியில் தள்ள அவருக்கு பிக்ஸ் வந்திருந்தது. இதற்கு கம்ருதீனும் உடந்தையாக இருந்ததால் இருவரும் ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டனர்.

சிலருக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் பார்வதி ஃபேன்ஸ் கொஞ்சம் அப்செட் ஆகி இருந்தனர். இந்த நிலையில் பார்வதியின் அம்மா பேசி இருப்பது தற்போது வெளியாகி உள்ளது அதாவது பிக் பாஸ் வீட்டின் கார் டாஸ்கின் போது நான் நள்ளிரவு 2 மணி வரை ஷோ பார்த்துக் கொண்டுதான் இருந்தேன். அவ நல்ல கேம் ஆடினா அவளை எதிர்த்து பேசின உங்களுக்கு எதிரா கேள்வி கேட்டா கெத்தா வீட்டை விட்டு வெளியே வந்தா என்று கூறியுள்ளார்.இது மட்டுமில்லாமல் நிமிர்ந்த நன்னடையும் மேற்கொண்ட பார்வையுடனும் தான் அவ வந்தா பாரதி சொன்னது போல பாரதி கண்ட புதுமைப் பெண் பாரு என்று பாராட்டியுள்ளார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Parvati's mother praises Parvati when she comes out of the house..!
Parvati’s mother praises Parvati when she comes out of the house..!