கண்ணனைப் பற்றி கிண்டலாகப் பேசிய கடை வேலைக்காரனை பளார் என அறைந்துள்ளார் மீனாவின் அப்பா.
Pandian Stores Episode Update 29.09.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர். மல்லியும் கஸ்தூரியும் ஒன்றாக அமர்ந்து நடந்தது குறித்து பேசி வருகின்றனர். இந்த நேரத்தில் மீனாவின் அம்மா வீட்டிற்கு வந்து புடவைகளை எடுத்து செல்ல வந்ததாக கூறுகிறார். மேலும் எல்லாரும் தனத்தை பாராட்டுறாங்க. தனம் இல்லனா அந்த வீடு முடங்கிப்போய் இருக்கும் என தனது மகளை பற்றி பெருமையாக பேசுகிறார்.
ஐபிஎல் தர்பார் : 8 அணிகளின் புள்ளிப்பட்டியல் முழுவிவரம்..
கஸ்தூரி மற்றும் மல்லி இருவரும் தனத்தை கண்டபடி பேசுகின்றனர். கண்ணனை இன்னும் கொஞ்ச நாள்ல அப்படியே உள்ள சேர்த்துவிடுவார். அப்புறம் எல்லாரும் சந்தோஷமா இருப்பாங்க என கஸ்தூரி கூறுகிறார். தனம் கூப்பிட்டாங்க நான் இங்க காரைக்குடி வந்திருக்கவே கூடாது என மல்லி கூறுகிறார்.
அதன் பின்னர் அங்கு வீட்டில் தனம் அத்தை படுத்திருந்த கட்டில் பார்த்து அழத் தொடங்கி விடுகிறார். மீனா வந்து சமாதானப்படுத்துகிறார் பின்னர் தனத்தின் அம்மாவும் சமாதானம் செய்கிறார். இங்கே ஐஸ்வர்யா படத்தின் தண்ணீர் எடுத்துச் சென்று வந்தபோது அவரை ஒரு பெண்மணி நீ எல்லாம் என்ன பொண்ணுமா என திட்டமிடுகிறார். உங்க அத்தையை இப்படி கொண்ணுட்டீங்களே என கூறுகிறார்.
அதன் பின்னர் ஜனார்த்தனன் கடைக்கே வரச் சொன்னதாகக் கூறி கடையில் வேலை செய்யும் ஒருவர் வந்து அழைக்கிறார். அப்போது எவ்ளோ பெரிய வேலைய ஈசியா செஞ்சிட்டதா கண்ணா. உங்க அம்மாவ நீ தான் கொண்ணுட்டேனு ஊரெல்லாம் பேச்சு என கூறுகிறார். அதன் பின்னர் ஜனார்த்தனன் வர சொன்னதாக இருவரையும் கூட்டிச் செல்கிறார்.
Karthi நான்லாம் School Life-லையே இதான் பேசிட்டு இருப்போம்! – K.E.Gnanavel Raja Speech
கடைக்குப் போனதும் ஜனார்த்தனன் கண்ணனை திட்ட உடனே அந்த நபர் ஆமா அண்ணாச்சி ஜால்ரா போட்டு கண்ணனை திட்டுகிறார். இதனால் ஜனார்த்தனன் கோபமாகி அந்த நபரை பளார் என அறை விட்டார். அவன் என் சொந்தகார பையன் அவனை திட்டுவதற்கு முழு உரிமை எனக்கு இருக்கு. பேச வந்துட்டான் என திட்டி போய் வேலையைப் பார்க்குமாறு கூறுகிறார். இத்துடன் முடிகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட்.