வாழ்வில் ஒருவர் நல்ல முறையில் வாழ அவருக்கு பொருட்செல்வம் அவசியம். ஆனால் ஒரு சிலர் தாங்கள் என்ன தான் கடினமாக உழைத்தாலும், அவர்களால் அதிக செல்வத்தை ஈட்டமுடிவதில்லை. அப்படிப்பட்டவர்களுக்கான மந்திரம் தான் இந்த பண வசியம் மந்திரம்.
பண வசிய மந்திரம்:
“ஓம் ரீங் வசி வசி தனம் பணம் தினம் தினம்”
ஒரு அமாவாசை தினத்தன்று வீட்டின் பூஜையறையிலோ அல்லது வேறு ஒரு அறையிலோ தனியாக தியானத்தில் அமர்ந்து இந்த மந்திரத்தை ஜபிக்க துவங்க வேண்டும்.
அதன் பிறகு இந்த மந்திரத்தை தினமும் 108 முறை 1008 முறை என உங்களுக்கு வசதியான எண்ணிக்கையில் தொடர்ந்து ஜபித்து வர வேண்டும்.
1,00,000 முறை ஜபித்த பின் இந்த மந்திரம் சித்தியாகும்.
அதன் பிறகு தினமும் இம்மந்திரத்தை காலையில் 108 முறை ஜெபித்து தொழில், வியாபாரம், வேலை போன்றவற்றை தொடங்க நீங்கள் எதிர்பார்க்கும் பணம் உங்களுக்கு வந்து சேரும்.