இந்திய அணியின் வேக பந்து வீச்சாளர் பும்ரா. இவரை பாகிஸ்தான் வீரர் விமர்சித்ததை பத்திரிகை நிருபர்கள் கேட்டனர் அதற்கு பும்ரா தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
அவர் கூறியதாவது :
யார் என்ன சொன்னாலும் அதனை நான் பெரிதாக எடுத்துக்கொண்டு கவலைப்பட மாட்டேன், எனக்கு எது வசதியாக இருக்கின்றதோ அவ்வாறு நான் பந்து வீசுகிறேன். என்று பதிலளித்து இருக்கிறார்.
மேலும் அடுத்த ஆஸ்., உடனான போட்டியில் உங்களின் பந்து வீச்சில் மாற்றங்கள் இருக்குமா இல்லை எந்த மாதிரியான யுத்தியை பயன்படுத்த போகிறீர்கள் என்று கேட்டதற்கு, அவர் ஆஸ்.,ஆடுகளத்தில் பந்து நன்கு சுழலும் அதே நேரத்தில் நல்ல ரன் எடுக்க முடியும்.
எனவே அந்த ஆடுகளத்தை பார்த்த பிறகே திட்டமிட முடியும், மேலும் அப்போட்டிக்கு இன்னும் காலம் இருப்பதால் நான் தற்போதைய போட்டிகளில் கவனம் செலுத்துகிறேன், என்று பும்ரா கூறினார்.