நடிகை நித்யா மேனன் தனது திருமணம் குறித்து வெளியான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ‘180’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நித்யா மேனன். அதற்குப் பிறகு துல்கர் சல்மானின் ஓ காதல் கண்மணி என்ற படத்தின் மூலம் பிரபலமான இவர் தொடர்ந்து விஜயுடன் மெர்சல், ராகவா லாரன்ஸின் காஞ்சனா 2 என நடித்து அதிக ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் உள்ள முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார்.

இவரது நடிப்பில் தற்போது தமிழில் தனுஷின் திருச்சிற்றம்பலம், மலையாளத்தில் ஆறாம் திருகல்பனா போன்ற இரண்டு படங்கள் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் ரிலீஸ் இருக்க தயாராக இருக்கிறது. மேலும் ஹைதராபாத் மாடர்ன் லவ் என்ற அந்தலாஜி திரைப்படத்திலும் நடித்துள்ளார். இதை அடுத்து அவர் வேறு எந்த படங்களிலும் ஒப்பந்தமாகாமல் இருப்பதால் இவர் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற வதந்திங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் பரவியிருந்தது.

ஆனால் அதை மறுத்துள்ள நித்தியாமேனன் இப்பொழுது எனது முழு கவனமும் எனது வேலையில் தான் இருக்கிறது என்றும் ஊடகங்கள் இது போன்ற தவறான தகவல்களை வெளியிடும் முன்னர் அதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறி இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.