nirmala devi
நீதிமன்றத்திற்கு நிர்மலா தேவி ஸ்கூட்டலில் வந்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

Nirmala devi coming to court by scooter – கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேல் சிறை தண்டனை பெற்றவர் பேராசிரியை நிர்மலா தேவி. சில மாதஙக்ளுக்கு முன்பு அவருக்கு ஜாமின் கிடைத்தது.

nirmala devi

தனிமை சிறையில் அடைக்கப்பட்டிருந்தது, தொடர் விசாரணை ஆகியவற்றால் மனநலம் பாதிக்கப்பட்ட அவர் நீதிமன்ற வாசலில் அமர்ந்து தியானம் செய்வது, தனியாக பேசுவது போன்ற வீடியோக்கள் ஏற்கனவே வெளியானது. தற்போது அவர் மனநல சிகிச்சைக்கு பின் மீண்டுள்ளார் எனக் கூறப்படுகிறது. வழக்கு தொடர்பாக நீதிமன்றத்திற்கு வரும் நிர்மலா தேவியின் புகைப்படம் தொடர்ந்து வெளியாகி வருகிறது. ஒரு முறை சுடிதாரிலும், ஒரு முறை புடவைக்கட்டி தலை நிறைய பூ வைத்தும் அவர் வந்த புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகின.

படுக்கை அறையில் பாம்புகள் உல்லாசம் – அமர்ந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

இந்நிலையில், சமீபத்தில் நீதிமன்றத்திற்கு தலையில் ஹெல்மெட் அணிந்து, அவர் ஸ்கூட்டரில் வந்திருந்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.