திருமண நாளில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் செய்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
கேரளாவில் சாதாரண நிகழ்ச்சித் தொகுப்பாளராக பயணத்தை தொடங்கி இன்று உலகம் முழுவதும் பிரபலமான லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் இருவரும் இன்று திருமணம் செய்து கொள்கின்றனர்.
இவர்களின் திருமணம் சென்னையில் உள்ள மகாபலிபுரத்தில் ஒரு பிரபல ரெசார்ட்டில் கோலாகலமாக நடந்தது. இவர்களின் திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விஜய் சேதுபதி அனிரூத் நெல்சன் உட்பட பல்வேறு திரையுலக பிரபலங்கள் பங்கேற்றனர்.
மேலும் ஷாருக்கான் தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் உட்பட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். திருமண நாளில் நயன்தாரா மற்றும் விக்னேஸ்வரனை இருவரும் இணைந்து தமிழகம் முழுவதும் பதினெட்டாயிரம் குழந்தைகளுக்கு மதிய உணவு அளிக்க முடிவு செய்துள்ளனர்.
இவர்களின் இந்த செயலை அறிந்த ரசிகர்கள் பலரும் இருவரையும் மனதார பாராட்டி திருமண நாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.