எல்லாத்தையும் விட்டுட்டு ராணுவத்தில் சேருவேன் என்று நட்டி நட்ராஜ் வெளியிட்ட பதிவிற்கு பல கருத்துக்களை தெரிவிக்கும் நெட்டிசன்கள்.

மத்திய அரசு சமீபத்தில் கொண்டுவந்த அக்னிபாத் திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி இருக்கும் நிலையில் ஆனந்த், மகேந்திரன் உள்ளிட்ட தொழில் அதிபர்கள் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.அதற்கு அக்னிபாத் திட்டத்தில் பணி முடிந்த வீரர்களுக்கு தங்களது நிறுவனத்தில் வேலை கொடுப்போம் என்று கூறியுள்ளனர். இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் மற்றும் ஒளிப்பதிவாளரான நட்டி நட்ராஜ் இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அது என்னவென்றால் இந்த நிமிஷம் எனக்கு ராணுவத்தில் அனுமதி கிடைத்தால், அனைத்தையும் விட்டுட்டு ராணுவத்தில் சேருவேன்  என்றும் தேசமே தெய்வம் என்ற பதிவை அவரின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இதுகுறித்து வழக்கம்போல் நெட்டிசன்கள் பலர் நட்டி நடராஜனை எதிர்த்தும்,ஆதரவு தெரிவித்தும் பல கருத்துக்களைக் கூறி  பதிவு செய்து வருகின்றனர்.