தாமரை செல்வியுடன் என்ன பிரச்சனை என்பது குறித்த ரசிகரின் கேள்விக்கு உண்மையை போட்டு உடைத்துள்ளார் நமிதா மாரிமுத்து.

Namita MariMuthu Opens up About Thamarai Selvi : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் நமிதா மாரிமுத்து. இவர் முதல் வாரத்திலேயே பிக் பாஸ் வீட்டில் இருந்து உடல் நலக் குறைபாடு காரணமாக வெளியேறி விட்டார்.

இன்று சூரசம்ஹாரம் : மௌன விரதம் மிகச்சிறப்பாகும்.!

இருப்பினும் இவரது வெளியேற்றத்திற்கு தாமரை செல்வியுடன் ஏற்பட்ட மோதல் தான் காரணம் என கூறப்பட்டது. இந்த நிலையில் நமிதா மாரிமுத்து இன்ஸ்டாகிராம் லைவ் சேட்டில் ரசிகரின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது உங்களுக்கும் தாமரைக்கும் இடையே என்ன பிரச்சனை என ரசிகர் ஒருவர் கேட்டுள்ளார்.

படம் பார்த்து அழுதுட்டேன்! – Annaatthe Day 5 Family Audience Review | Rajinikanth, Nayanthara | HD

அதற்கு பதிலளித்துள்ள நமிதா மாரிமுத்து எனக்கும் தாமரைக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. உண்மையில் அவருக்கு இந்த விளையாட்டை எப்படி விளையாட வேண்டும் என தெரியவில்லை. சொல்லப்போனால் இந்த விளையாட்டை விளையாடுவதற்கான பலம் அவரிடம் இல்லை. அவர் ஒரு நல்ல மனுஷி தான். ஆனால் உண்மையில் அவர் வெள்ளந்தியா என்பது எனக்கு தெரியவில்லை. எங்கள் வீட்டு பங்ஷனில் கூட அவரை பர்பார்ம் செய்ய வைக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் வைல்ட் கார்ட் என்ட்ரியில் உள்ளே செல்வீர்கள் என கேட்டதற்கு போகலாம் அல்லது போகாமலும் இருக்கலாம் என பதிலளித்துள்ளார்.

டைட்டிலை வெல்ல யாருக்கு வாய்ப்புள்ளது என கேட்டதற்கு சிபி சந்திரன் அல்லது இசைவாணி என தெரிவித்துள்ளார்.