நமிதா மாரிமுத்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற என்ன காரணம் என்று நாடியா சாங் போட்டு உடைத்துள்ளார்.

Naadia Chang About Namitha MariMuthu Issue : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனின் முதல் எலிமினேஷனில் வெளியேறியவர் நாடியா சாங். இவர் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பேசியுள்ளார்.

என்னுடைய குடும்பத்தை பிரிந்து இருப்பது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. குடும்பத்தைப் பற்றி பிக் பாஸ் வீட்டில் பேசியதும் முழுமையாக வீட்டு ஞாபகம் வந்துவிட்டது. நானே விரைவில் வெளியே வர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இருந்தேன். இந்த எலிமினேஷன் எனக்கு மகிழ்ச்சிதான் கொடுத்தது என கூறியுள்ளார். மேலும் அபிஷேக் தொடர்ந்து என்னை வம்பிழுத்து கொண்டே இருந்தார். இன்னும் ஒரு வாரம் உள்ள இருந்தால் எனக்கு உள்ளே இருக்கும் மிருகம் வெளியே வந்திருக்கும். அதன்பிறகு அபிஷேக்கை வச்சி செய்திருப்பேன் என கூறியுள்ளார்.

70 வயதில் குழந்தை பெற்ற பாட்டி : வாழ்த்து மழையில் செம ஹேப்பி..

மேலும் நமிதா மாரிமுத்து வெளியேற்றத்திற்கான காரணம் குறித்து கேட்டதற்கு அவருக்கு உடல்நிலை சரியில்லை அதனால்தான் அவர் வீட்டிலிருந்து வெளியேறினார். அதன் பிறகு இதைப் பற்றி என்னால் எதையும் கூறமுடியாது என பேசி பேட்டியை முடித்துள்ளார்.

Ashwin Frame-ல நின்னாலே Cuteஆ இருப்பாரு – Sridhar Master Speech | Yaathi Yaathi Music Video