Modi visits Chennai – சென்னை:நாளை சென்னை வண்டலூரில் நடக்க உள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள பிரதமர் மோடி சென்னை வருகிறார்.
இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.,
அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ள நிலையில், நாளை சென்னை வண்டலூரில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
மேலும் நடக்க உள்ள இந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில், இந்த பொது கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
டெல்லியில் இருந்து சென்னைக்கு தனி விமானம் மூலம் வரும் பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் வண்டலூர் பொதுக்கூட்டத்திற்கு வருவார் என தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக மூன்று ஹெலிபேடுகள் அமைக்கும் பணியும்,பிரதமர் வருகையையொட்டி பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, கன்னியாகுமரி வந்த பிரதமர் மோடிக்கு எதிராக வைகோ தலைமையில் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நாளை நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் பங்கேற்பாரா? தேமுதிக உடன் அதிமுக கூட்டணி அமைக்குமா?..போன்ற கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
இருப்பினும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் பங்கேற்பார் என்று தெரிவித்துள்ளார்.