நடிகர் சிரஞ்சீவி சாராவின் இரங்கல் கூட்டத்தில் அவரது மனைவி உறவினருடன் சிரித்துக்கொண்டே இருந்துள்ளார்.
Meghna Raj‘s Emotional on Chiranjeevi Sarja Death : கன்னட சினிமாவின் பிரபல நடிகரான சிரஞ்சீவி சாரா கடந்த மாதம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தார். இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அர்ஜுனின் மருமகன் ஆவார்.
தமிழ் சினிமாவில் காதல் சொல்ல வந்தேன் என்ற படத்தில் நாயகியாக நடித்த மேக்னாராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சிரஞ்சீவி.
இவருடைய மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. அதிலும் இன்னொரு சோகம் என்னவென்றால் தற்போது தான் மேக்னாராஜ் நான்கு மாத கர்ப்பமாக இருந்து வருகிறார்.
தற்போது சிரஞ்சீவி சாரா உயிரிழந்து ஒரு மாதம் ஆகி விட்ட நிலையில் இரங்கல் தெரிவிப்பதற்காக இரங்கல் கூட்டம் நடைபெற்றுள்ளது.
மேக்னா ராஜ் மற்றும் சிரஞ்சீவிவின் குடும்பத்தினர் இந்த இரங்கல் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் எடுத்த இரண்டு புகைப்படங்களை மேக்னா ராஜ் வெளியிட்டுள்ளார்.
சினிமாவில் இருந்து விலக முடிவு எடுத்த ரஜினி? இதுதான் கடைசி படமா? – வெளியான ஷாக் தகவல்
ஆனால் அனைவரும் சிரித்துக் கொண்டே இருந்துள்ளனர். இதற்கான காரணம் என்ன என்பதை மேக்னாராஜ் பதிவிட்டுள்ளார்.
என்னுடைய புன்னகைக்கு நீங்கள் தான் காரணம். நானும் நம்முடைய குடும்பமும் எப்போதும் புன்னகையுடன் இருக்க வேண்டும் என்பது தான் உங்களுடைய ஆசை. நாங்கள் அவ்வாறு இல்லை என்றால் அது உங்களுக்கு பிடிக்காது என எனக்கு நன்றாக தெரியும்.
இனியும் உங்கள் ஆசைப்படி தான் ஒன்றாக ஒற்றுமையாக புன்னகையுடன் இருப்போம் என பதிவிட்டுள்ளார். இவருடைய இந்த பதிவு ரசிகர்களை கலங்க வைத்தது மட்டுமல்லாமல் நெகிழவும் வைத்துள்ளது.