மாயநதி படத்திற்கான டிக்கெட் புக்கிங் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வரும் அபி சரவணன் மற்றும் வெண்பா ஆகியோர் இணைந்து நடித்துள்ள திரைப்படமான மாயநதி நாளை மறுநாள் ( ஜனவரி 31 ) முதல் திரைக்கு வர உள்ளது.
அசோக் தியாகராஜனின் கதை, திரைக்கதை, இயக்கம், தயாரிப்பு என அனைத்திலும் கவனம் செலுத்தி உருவாகியுள்ள இந்த படத்திற்கான டிக்கெட் புக்கிங் தற்போது தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
அழகிய காதல் கதையை கொண்டு இப்படம் உருவாகி இருப்பதால் இளம் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இப்படத்தின் டீஸர், ட்ரைலர் ஆகியவையும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
#Maayanadhi hits the screens this Friday, Jan 31st. Booking open now. #MaayanadhiFrom31stJan #MaayanadhiIn2Days @AbiSaravanan7 @ashokthiagaraj2 @bhavatharini @Gopikri_edit @kmoorthykannan @VenbaOfficial @actor_appukutty @U1Records @urkumaresanpro pic.twitter.com/FDs7t1zvRi
— Kalakkal Cinema (@kalakkalcinema) January 29, 2020