மதுரை காளை மாட்டின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் செய்த செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
Madurai Cow Video Reflection : மதுரை பாலமேட்டில் சேர்ந்த முனியாண்டி என்பவர் வறுமை காரணமாக தன்னுடைய வீட்டில் இருந்த பசு மாட்டை விற்றார்.
அப்போது அந்த பசுவுடன் சேர்ந்து வளர்ந்த மஞ்சமலை கோவில் சார்ந்த காளை மாடு பசுமாட்டை ஏற்றிச் சென்ற வாகனத்தை மறித்து பாசப் போராட்டத்தில் ஈடுபட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பலரையும் நெகிழ வைத்தது.
இதனை அடுத்து ஜல்லிக்கட்டு நாயகர், அதிமுக கழக ஒருங்கிணைப்பாளருமான துணை முதல்வர் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் வழிகாட்டுதலின் படி தேனி பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஓ.ப.ரவிந்திரநாத்குமார் அவர்களின் ஆசியுடன் திரு.வி.ப.ஜெய பிரதீப் அவர்கள் அந்த பசு மாட்டினை மீட்டு அதை கிராமத்து பெரியோர்கள், ஊர் பொதுமக்கள் முன்னிலையில் பசு மாட்டினை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் திரு.மாணிக்கம்.M.L.A., ஒன்றிய செயலாளர் திரு.ரவிசந்திரன் மற்றும் நகரசெயலாளர் திரு.V.k.குமார் ஊராட்சி தலைவர் திரு.செல்வராணி சிதம்பரம் வட்ட செயலாளர் திரு.M.கர்ணா , மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.