எதிர்நீச்சல் பார்ட் 2 குறித்து விளக்கம் அளித்துள்ளார் ஜனனி.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். ஆரம்பித்த வேகத்திலேயே மக்களின் மனதைப் பெற்று நம்பர் ஒன் இடத்தை பிடிக்க தொடங்கிய இந்த சீரியல் தொடர்ச்சியாக அந்த இடத்தை தக்கவைத்து வந்தது.
மாரிமுத்துவின் மறைவுக்கு பின் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் வேலராமமூர்த்தி நடிக்க தொடங்கினார். அதன் பிறகு கதை கண்டபடி நகர்ந்து சென்று ரசிகர்கள் மத்தியில் போர் அடிக்கச் செய்தது.
இந்த நிலையில் சமீபத்தில் மொத்தமாக முடிவுக்கு வந்தது. இதன் நிலையில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்த மதுமிதா சமீபத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.
அப்போது ரசிகர் வருவார் எதிர்நீச்சல் சீரியலில் இரண்டாம் பாகம் உருவாவதாக தகவல் வெளியானது அது உண்மையா என்று கேட்க மதுமிதா தற்போது வரை இப்படி எந்த விஷயமும் எங்களுக்கு கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு நீங்கள் மீண்டும் புதிய சீரியல் நடிக்க தொடங்கி அந்த சீரியல் சூட்டிங் எதிர்நீச்சல் வீட்டில் நடந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்க அது எதிர்பாராத ஒரு விஷயம்.. வித்தியாசமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.