சுற்றி கரு மேகங்கள் சூழ்ந்திருக்க பலிச் என்று புகைப்படம் எடுத்திருக்கும் பிரியா மோகனின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தெலுங்கு சினிமாவில் நடித்து பிரபலமான பிரியங்கா மோகன் தமிழில் சிவகார்த்திகேயனின் டாக்டர் என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே அதிக ரசிகர்களை கவர்ந்துள்ள இவர் தொடர்ந்து சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் மீண்டும் சிவகார்த்திகேயனின் டான் போன்ற திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார்.

தற்பொழுது நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க இணைந்திருக்கும் பிரியங்கா மோகன் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதேபோல் தற்போது கருமேகங்கள் சூழ்ந்து இருக்க பலிச் என்று வெள்ளை நிற ஆடையில் எடுக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அது தற்பொழுது வைரலாகி வருகிறது.