நடிகை ராஷ்மிகா மந்தனா தன்னை பான் நடிகையாக மாற்றியது புஷ்பா திரைப்படம் தான் என்று கூறியிருக்கிறார்.

தென்னிந்திய சினிமாவில் தற்போது டாப் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர்தான் ராஷ்மிகா மந்தனா. தற்போது ரசிகர்களின் லேட்டஸ்ட் கிரஷ் ஆக மாறியிருக்கும் இவர் தெலுங்கில் விஜய் தேவர் கொண்டவுடன் இணைந்து நடித்த கீதா கோவிந்தம் என்ற படத்தின் மூலம் பல ரசிகர்களுக்கு பரிச்சயமானார்.

அதன் பிறகு தமிழில் கார்த்தியின் சுல்தான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் மீண்டும் தமிழ் தெலுங்கு என பழமொழிகளில் வெளியாகி மாபெரும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த புஷ்பா தி ரைஸ் என்று அல்லு அர்ஜுனின் திரைப்படத்தில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகி பல ரசிகர்களின் மனதில் லேட்டஸ்ட் கிரஷ் ஆக வலம் வருகிறது. தற்போது தளபதி விஜயின் வாரிசு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் இவர் அப்படத்தை தொடர்ந்து புஷ்பா 2, மிஷன் மஜ்னு ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் இவரது நடிப்பில் வரும் அக்டோபர் 7ஆம் தேதி இந்தியில் வெளியாக உள்ள குட் பை என்ற திரைப்படத்தில் அமிதாபச்சன் உடன் இணைந்து நடித்திருக்கிறார். இந்நிலையில் நடிகை ராஷ்மிகா தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் உடன் இணைந்து நடித்த புஷ்பா திரைப்படம் தன்னை பான் இந்தியா நடிகையாக மாற்றியுள்ளதாக அண்மையில் தெரிவித்திருக்கிறார். அதன் பிறகு புஷ்பா 2 திரைப்படம் மேலும் நல்ல வரவேற்பை தனக்கு பெற்று தரும் என நம்புவதாகவும் கூறியுள்ளார்.