லாஸ்லியாவின் செயலால் கவின் ஆர்மியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் லாஸ்லியா.
பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது கவினின் மீது காதல் கொண்டார். இவர்களின் காதல் ரசிகர்கள் மத்தியிலும் கொண்டாடப்பட்டது, தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. இவர்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதே பலரின் ஆசையாக உள்ளது.
ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கவினும் லாஸ்லியாவும் சந்தித்து கொண்ட படியோ, ஒன்றாக வெளியே எங்கயும் சென்றபடி தெரியவில்லை. இதற்கெல்லாம் காரணம் லாஸ்லியாவின் அப்பா போட்டிருக்கும் கண்டிஷன் தான் ஏற்கனவே பேசப்பட்டு வந்தது.
தற்போது நடந்து விருது விழா ஒன்றிலும் விருது வாங்க சென்ற லாஸ்லியா வரிசையில் நின்றிருந்த போது அங்கிருந்தவர்களுக்கு கை கொடுத்து பேசினார். ஆனால் கவினை கண்டு கொள்ளவே இல்லை. இதனால் இவர்களுக்கு என்னவானது என ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.
மேலும் கவினுக்கும் லாஸ் கை கொடுத்திருக்கலாம், அதை எடிட் செய்து இருக்கலாம் எனவும் அப்பா கண்டிஷனை இன்னமும் பின்பற்றுகின்றனர். அது தான் கை கொடுக்காததற்கு காரணம் எனவும் கூறுகின்றனர்.
உண்மை என்ன என்பது கவினுக்கும் லாஸுக்கும் தெரியும்.