விஜய் டிவியை விளாசி எடுத்து பதிவிட்டுள்ளார் கஸ்தூரி.
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் வைல் கார்ட் எண்ட்ரியாக உள்ளே சென்றார்.
கஸ்தூரியின் என்ட்ரி பிக் பாஸ் வீட்டில் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தும், ஆட்டம் சூடு பிடிக்கும் என எதிர்பார்த்த அனைவருக்குமே கிடைத்தது என்னவோ ஏமாற்றம் மட்டும் தான்.
ட்விட்டரில் வரிந்து கட்டி கொண்டு அனைத்திற்கும் குரல் கொடுக்கும் கஸ்தூரியின் குரல் பிக் பாஸ் வீட்டிற்குள் ஒலிக்கவே இல்லை.
வி ஆர் தி பாய்ஸ் டீமை சேர்ந்த கவின், சாண்டி, தர்ஷன், முகேன் ஆகியோரின் குரல் தான் ஓங்கி இருந்தது. இவர்களின் ஆட்டம் தான் பெரிய அளவில் இருந்தது.
தற்போது இவர்களை வைத்து விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. இதற்கான ப்ரோமோ வீடியோவை பார்த்த கஸ்தூரி நான் ஆம்பள நான் ஆம்பள என்று தனக்குத்தானே ஊளையிடுவதை இவ்வளவு தட்டிகுடுக்க வேண்டாமே? எனவும் உங்களுக்கு பேவரானவர்களை இப்படி ப்ரொமோட் செய்யாதீர்கள் எனவும் கண்டித்துள்ளார்.
In very very bad taste. In promoting its favorites, @vijaytelevision has ended up promoting toxic fake masculinity. நான் ஆம்பள நான் ஆம்பள என்று தனக்குத்தானே ஊளையிடுவதை இவ்வளவு தட்டிகுடுக்க வேண்டாமே? You owe it our youngsters to set better standards. #BiggBossTamil @ikamalhaasan https://t.co/UmLZv41wqA
— Kasturi Shankar (@KasthuriShankar) October 14, 2019