Kadambur Raju About Movie Shooting
Kadambur Raju About Movie Shooting

திரைப்படங்களின் சூட்டிங் தொடங்குவது எப்போது என்பது குறித்து கடம்பூர் ராஜு பதிலளித்துள்ளார்.

Kadambur Raju About Movie Shooting : சீனாவின் யுகான் மாகாணத்தில் தோன்றிய கொரானா வைரஸ் தற்போது உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது.

இந்த வைரஸ் தாக்கத்தின் காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அனைத்து துறைகளும் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.

பதட்டத்தோடு தான் இதை செய்தேன், ஆனால் இப்படி நடக்கும்னு எதிர் பார்க்கல – நடிகர் சாந்தனு வெளியிட்ட அறிக்கை!

இதன் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. திரைப்பட சூட்டிங் ஆகியவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் சில தினங்களுக்கு முன்னர்தான் சின்னத்திரை சீரியல்களுக்கான ஷூட்டிங்கில் சில கட்டுப்பாடுகளுடன் தொடங்கலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

இதனையடுத்து வெள்ளித்திரை சூட்டிங்கில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் அதுகுறித்து கடம்பூர் ராஜு விளக்கம் அளித்துள்ளார்.

அதாவது தற்போதைக்கு ஆந்திராவில் மட்டுமே படத்தின் சூட்டிங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரானா தாக்கம் அதிகமாக இருப்பதால் முதல்வர் தகுந்த நேரத்தில் தக்க முடிவை எடுப்பார் என கூறியுள்ளார்.

இதனால் தற்போதைக்கு திரைப்படங்களுக்கான ஷூட்டிங் தொடங்குவதற்கு வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.