PS2 படத்தில் நடித்தது குறித்து ஜெயம் ரவி வெளிப்படையாக பகிர்ந்திருக்கும் தகவல் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அருண்மொழிவர்மன் எனப்படும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

முதல் பாகத்தின் வரவேற்பை தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் 28ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் இப்படத்தின் பிரமோஷன் பணிகளில் படக்குழு உடன் ஜெயம் ரவியும் தீவிரம் காட்டி வருகிறார். அந்த வகையில் பெங்களூரில் நடைபெற்ற ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அவரின் சுவாரசியமான தகவல்கள் தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர், நான் படங்களில் நல்லவனாக நடிக்க விருப்பமில்லை ஏனெனில் அத்தகைய கதாபாத்திரத்தால் ஒரே மாதிரியான நடிப்பை மட்டும் வெளிபடுத்த முடியும். ஆனால் கெட்டவனாக நடித்தால் தனது நடிப்பு திறனை நன்றாக வெளிப்படுத்தலாம் எனக் கூறியிருக்கிறார்.

மேலும், இப்படத்தில் ராஜ ராஜ சோழன் கதாபாத்திரத்தில் நடிக்க மணி சார் நிறைய திறன்களை சொல்லி தந்ததாகவும், இந்த கதாபாத்திரத்திற்காக யாரையும் பார்த்து நான் காப்பி அடிக்க விருப்பமில்லை எனவும் தெரிவித்திருக்கிறார். ஏனெனில் பல ஆண்டுகளுக்கு முன்பு ராஜராஜ சோழன் கதாபாத்திரத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்திருப்பதாக கூறிய ஜெயம் ரவி அப்படத்தை தான் பார்க்கவில்லை என்றும் ஒரு வேளை அந்த படத்தை நான் பார்த்திருந்தால் அவரின் நடிப்பின் தாக்கம் என்னுள் வந்திருக்கும், என் நடிப்பு அவர் நடிப்பிற்கு 10 சதவீதம் கூட ஈடாகாது என்றும் தெரிவித்திருக்கிறார். என்னால் எப்படி நடிக்க முடியுமோ அப்படி நடித்தேன் என்றும் அதற்காக மணி சார், கல்கி, கடவுள் உள்ளிட்டோரை நம்பியதாகவும் கூறியிருக்கிற.