ISL 2019
ISL 2019

ISL 2019  – 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் கோவாவில் நேற்று இரவு நடந்த 80-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா-கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. அணிகள் மோதின.

தொடக்கம் முதலே இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை தொடுத்தன. 22-வது நிமிடத்தில் கோவா அணியின் பெர்ரான் கொராமினாஸ் முதல் கோல் எடுத்தார்.

25-வது நிமிடத்தில் கோவா அணி வீரர் எடு பெடியா கோல் அடித்தார். முதல் பாதியில் கோவா அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

இந்த நிலையில் பதில் கோல் திருப்ப கேரளா அணியினர் எடுத்த பல முயற்சிக்கு இறுதி வரை பலன் எதுவும் கிடைக்கவில்லை.

முடிவில் கோவா அணி 3-0 என்ற கோல் கணக்கில் கேரளா அணியை வீழ்த்தியது. 16-வது ஆட்டத்தில் ஆடிய கோவா அணி 9 வெற்றி, 4 டிரா, 3 தோல்வியுடன் 31 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்ததுடன் ‘நாக்-அவுட்’ சுற்றுக்கு முன்னேறிய 2-வது அணியாக உள்ளது.

ஏற்கனவே பெங்களூரு எப்.சி. அணி ‘நாக்-அவுட்’ சுற்றுக்கு தகுதி பெற்று உள்ளது. 17-வது ஆட்டத்தில் ஆடிய கேரளா அணி சந்தித்த 7-வது தோல்வி இதுவாகும்.

இதனை தொடர்ந்து புதன்கிழமை இரவு 7.30 மணிக்கு கவுகாத்தியில் நடைபெறும் 81-வது லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி.(கவுகாத்தி)-எப்.சி.புனே சிட்டி அணிகள் பல பரிட்சை செய்ய உள்ளன.

இறுதி கட்டத்தை நெருங்கி உள்ள இந்த தொடர்பில் எந்த எந்த அணி இறுதி சுற்றுக்கு நுழைய உள்ளது என்பதை நடக்கும் போட்டிகள் முடிவில் தெரிய வரும்.

கோப்பையை வெல்ல வாய்ப்பு உள்ள அ‌ணிக‌ள் தங்களின் முழு திறனையும் வெளிபடுத்த வேண்டும். மேலும் ஒரு அணியாக ஒற்றுமையாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.