சபரிமலையில் துணிவு படத்தின் வெற்றியை கொண்டாடியுள்ளார் இயக்குனர் எச் வினோத்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக வெளியான திரைப்படம் துணிவு.
வங்கிக் கொள்ளையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றியை பெற்றுள்ளது.
தொடர்ந்து படம் வசூல் சாதனையை பெற்று வரும் நிலையில் இயக்குனர் எஸ் வினோத் சபரிமலையில் புஷ்பாபிஷேகம் செய்து துணிவு படத்தின் வெற்றியை கொண்டாடியுள்ளார்.
இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.