நடிகை ஜெனிலியா கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Genelia D’Souza About Covid19 : தமிழ் சினிமாவில் சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம், வேலாயுதம் என சில படங்களில் நடித்து பிரபலமானவர் ஜெனிலியா.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வந்த ஜெனிலியா பாலிவுட் நடிகர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
குடும்பத்தோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த ஜெனிலியா மூன்று வாரங்களுக்கு முன்பு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தற்போது அதிலிருந்து மீண்டு உள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தனக்கு அறிகுறி ஏதும் இல்லாமல் பார்த்து வியந்த வந்ததாகவும் தற்போது எடுக்கப்பட்ட டெஸ்டில் நெகட்டிவ் என வந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். கொரானா வைரஸில் இருந்து மீண்டு வந்ததற்கு கடவுளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அந்த 21 நாட்களாக தான் தனிமைப்படுத்தப்பட்டு இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். ஜெனிலியா கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்திருப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.