விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் வேளாண் பாதுகாப்பு திட்டத்தை வைத்து எதிர்கட்சிகள் ஏமாற்று அரசியல் செய்து வருவதாக புட்டுப்புட்டு வைத்துள்ளார் முதியவர் ஒருவர்.
Farmer Masotha Uses : மத்தியில் ஆளும் பாஜக அரசு இந்தியா முழுவதும் வேளாண் பாதுகாப்பு மசோதாவை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த மசோதா மூலம் விவசாயிகள் அவர்களின் விளைபொருட்களை எங்கு வேண்டுமானாலும் அவர்களின் விருப்பப்படி எந்தவித தடையும் இல்லாமல் சுதந்திரமாக விற்பனை செய்யலாம் என்பது தான் சிறப்புமிக்க ஒன்று.
ஆனால் எதிர்க்கட்சிகள் இது விவசாயிகளுக்கு பாதுகாப்பற்ற ஒரு மசோதா என கூறி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் விவசாய சங்கத்தைச் சார்ந்த ஒருவர் விவசாய மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என பல ஆண்டுகளாக விவசாயிகள் வேண்டி வருகின்றனர்.
இப்படியான நிலையில் தற்போது விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு இந்த மசோதாவை நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளது. இதன்மூலம் விவசாயிகள் அவர்களின் நிலங்களில் விளையும் விளைபொருட்களை அவர்களின் விருப்பப்படி நாடெங்கிலும் எந்தவிதத் தடையுமின்றி விற்பனை செய்யலாம்.
இந்த நல்ல திட்டத்தை எதிர்க்கட்சிகள் தங்களது சொந்த ஆதாயத்துக்காக விவசாயிகளுக்கு எதிரான மசோதா எனக் கூறி ஏமாற்றி அரசியல் செய்து வருவதாக அந்த முதியவர் கூறியுள்ளார்.
மேலும் இந்த வேளாண் மசோதா அமல்படுத்த பட்டுள்ளதால் என்னென்ன நன்மைகள் விவசாயிகளுக்கு கிடைக்கும் என்பது குறித்தும் அவர் தெளிவாக பிரபல பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.