காப்பி அடிக்க கூட ஒரு அளவில்லையா என பிக்பாஸ் நிகழ்ச்சியை நெட்டிசன்கள் பங்கம் பண்ணி வருகின்றனர்.
Fans Trolls on BB 4 : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இன்னும் இரண்டே வாரங்களில் இந்த நிகழ்ச்சி 100 நாட்களை நிறைவு செய்து முடிவுக்கு வர உள்ளது.
இந்த நிலையில் தற்போது ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த ப்ரீஸ் டாஸ்க் தொடங்கியுள்ளது.
முதல் ஆளாக பிக்பாஸ் வீட்டிற்குள் ஷிவானியின் அம்மா சென்றுள்ளார். இவர் சிவானியை பார்த்து நீ எதுக்கு உள்ள வந்த என கேட்க அவர் கண் கலங்குகிறார்.
இதனைப் பார்த்த பாலாஜி முருகதாஸ் எல்லாத்துக்கும் நான்தான் காரணம் என கண் கலங்குகிறார். இந்த காட்சிகள் கிட்டத்தட்ட அப்படியே மூன்றாவது சீசனில் இருந்து காப்பி அடித்தது என அப்பட்டமாக தெரிகிறது.
அதாவது லாஸ்லியாவின் அப்பா உள்ளே வந்து நீ எதுக்கு வந்த என்ன பண்ணிட்டு இருக்க என திட்டுவார். இதனால் கவின் எல்லாத்துக்கும் நான்தான் காரணம் என்று கண்கலங்கி அழுதுவிட்டேன் நிகழ்ச்சியின் பாதியிலேயே வெளியேறி விடுகிறார்.
அதே போல் தான் தற்போது ஷிவானியின் அம்மா சிவானியை திட்ட பாலாஜி முருகதாஸ் கண்கலங்கி அழுகிறார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் காப்பியடிக்கும் ஒரு அளவு வேண்டாமா என பிக்பாஸ் நிகழ்ச்சி கிண்டலடித்து வருகின்றனர். இதுவரைக்கும் தெலுங்கு இந்தி நிகழ்ச்சியிலிருந்து தான் காப்பி அடித்து வந்தீங்க இப்போ தமிழ் பிக் பாஸையே காப்பியடிக்க தொடங்கி விட்டீர்களா எனவும் கிண்டலடித்து வருகின்றனர்.