எஸ் கே ஆர் தம்பியிடம் பல்பு வாங்கியுள்ளார் குணசேகரன்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். நேற்றைய எபிசோடில் ஜனனி குணசேகரனிடம் பொய் சொல்லி ஈஸ்வரியை காலேஜுக்கு அனுப்பி வைத்த நிலையில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பதை தெரியவந்துள்ளது.
இது குறித்த ப்ரோமோ வீடியோவில் ஈஸ்வரி காலேஜுக்கு வந்த நிலையில் அவர் போன் போட்டு நான் கிளம்பி வந்துடவா என கேட்க ஈஸ்வரி பயந்து ஓடி வந்தீங்கன்னா திரும்பவும் நாலு சுவத்துக்குள்ள முடங்கி இருக்க வேண்டியது தான், முடிவை நீங்களே எடுங்க என சொல்கிறார்.
அடுத்து கடையில் தனக்கான துணியை ஜனனி அண்ணியை தேர்வு செய்யட்டும் என ஆதரவு சொல்ல உனக்கு ஒன்னு தெரியுமா? ஜனனியை எஸ் கே ஆர் குடும்பம் தத்தெடுத்துட்டாங்க என குணசேகரன் சொல்ல எஸ்.கே.ஆர் தம்பி ஜனனி கிட்ட எங்க குடும்பத்து குணம் இருக்கு, தத்தெடுத்த கூட தப்பில்லை என பல்பு கொடுக்கிறார்.
இன்னொரு பக்கம் ஜான்சிராணி இப்படி தெருத்தெருவா அலையவிட்டுட்டானே என புலம்புகிறார். இதனால் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்று எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எழுந்துள்ளது.