எஸ் கே ஆர் வீட்டிலிருந்து திரும்பிய ஜனனிக்கு எதிர்ப்பாராத அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் கடந்த சனிக்கிழமை எபிசோடில் குணசேகரன் மற்றும் ஜனனி என இருவரும் எஸ் கே ஆர் வீட்டுக்கு சம்பந்தப்பட்ட போயிருந்த நிலையில் சம்பந்தம் பேசி விட்டு அங்கிருந்து வீட்டுக்கு கிளம்புகின்றனர்.

இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது. இது குறித்த புல் மூவி காரில் வந்து கொண்டிருக்கும் போது ஈஸ்வரி அக்காவுக்கு பிரச்சனை என தர்ஷன் போன் போட்டு சொல்ல ஜனனி அந்த விஷயத்தை குணசேகரன் சொல்கிறார்.

அப்படி என்ன பெரிய பிரச்சனையா தர்ஷன் எதுக்கு போன் பண்ணி சொன்னான் என கேட்க இப்ப அதுவா முக்கியம் என ஜனனி சொல்ல எனக்கு நீ பாடம் எடுக்காத என குணசேகரன் அதிர்ச்சி கொடுக்கிறார். இதனால் ஜனனி காரில் இருந்து பாதியில் இறங்கி செல்கிறார்.

அடுத்து வீட்டுக்கு வரும் குணசேகரன் இடம் அப்பத்தா போன விஷயம் என்னாச்சு என கேட்க சக்சஸ் தான் என சொல்கிறார். அடுத்து ஜனனி எங்கே என கேட்க விஷயத்தை சொல்ல அதைக் கேட்டு நந்தினி மற்றும் ரேணுகா பதற அப்படியே பாசத்துல பொங்காதீங்க என ஷாக் கொடுக்கிறார்.

இதனால் ஈஸ்வரிக்கு என்ன ஆச்சு? இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் மத்தியில் இணைந்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.