
சொத்துக்காக குணசேகரன் திட்டம் போட மறுப்பக்கம் சக்தி கொதித்து எழுந்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் கதிர் ஜான்சி ராணியை வெளியே துரத்திய வேளையில் ஜான்சிராணி இனிமே இந்த வீட்டில் அலறல் சத்தம் மட்டும்தான் கேட்கணும் என முழு வில்லியாக மாறினார்.

இந்த நிலையில் இன்றைய எபிசோட் குறித்து ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் கரிகாலன் வீட்டு சொத்தை நம் கைக்கு கொண்டு வர பல சிக்கல்கள் உள்ளன. ஆனால் எஸ் கே ஆர் தம்பி அருணை கைக்குள்ள வைத்து எஸ் கே ஆர் சொத்து மொத்தத்தையும் நம்ப பக்கம் கொண்டு வரணும் என குணசேகரன் தன்னுடைய தம்பிகளிடம் சொல்கிறார்.
அடுத்து கிச்சனில் வீட்டுப் பெண்கள் எல்லோரும் இனியும் நம்பி ஏமாற முடியாது என பேசிக்கொண்டு இருக்க அப்போது அங்கு வரும் சக்தி யார் யாரை ஏமாற்றுகிறார் என கேட்க ஈஸ்வரி இங்கு என்ன நடந்தது என்று தெரியாமல் பேசாத என சொல்கிறார்.

அதற்கு ஷக்தி இந்த வீட்ல என் பொண்டாட்டி பத்தி பேசுற தகுதி யாருக்குமே கிடையாது என கோபப்படுகிறார். இதனால் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.