Earthquake
Earthquake

Earthquake – சென்னை: வங்கக்கடலில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக, சென்னையில் சில இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சென்னையில் மக்கள் பீதியில் உறைந்தனர்.

வங்கக் கடலில் இன்று காலை 7.02 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சென்னைக்கு வடகிழக்கே 609 கிமீ தொலைவில் கடல் மட்டத்தில் இருந்து 10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இது ரிக்டர் அளவு கோலில் 5.1 ஆக பதிவானது.

இந்நிலையில் இந்த நிலநடுக்கம் காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டது.

நில அதிர்வு ஏற்பட்ட உடனேயே, சில வினாடிகள் நில அதிர்வு இருந்ததாக, பலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

நிலநடுக்கம் காரணமாக எந்த சேதமும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் டைடல் பார்க் பகுதியில் நில அதிர்வு நன்கு உணரப்பட்டதாக சமூக வலைதளங்களில் மக்கள் மூலம் அதிகம் பகிரபட்டது குறிப்பிடத்தக்கது.

இதனால் சென்னையில் மக்கள் பீதியில் உறைந்தனர். இருப்பினும், இந்த நில அதிர்வினால் யாருக் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.