இயக்குனர் பாலா புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
Director bala doing film with R.K.Suresh – கடைசியாக, விக்ரம் மகன் துருவை வைத்து தெலுங்கு அர்ஜூன் ரெட்டியின் ரீமேக்கான ‘வர்மா’வை பாலா இயக்கினார்.
ஆனால், அப்படத்தின் உருவாக்கத்தில் அதிருப்தி அடைந்த தயாரிப்பு தரப்பு அப்படத்தை மீண்டும் வேறு இயக்குனரை வைத்து தற்போது எடுத்து முடித்துள்ளது.
இந்நிலையில், இயக்குனர் பாலா தற்போது புதிய படத்திற்கு தயாராகி விட்டார். நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் இப்படத்தின் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.
பாலாவின் இயக்கதில் வெளிவந்த தாரை தப்பட்டை திரைப்படத்தில் சுரேஷ் வில்லனாக நடித்திருந்தார். அதன்பின் மருது படத்திலும் நடித்திருந்தார். பில்லா பாண்டி படத்தில் ஹீரோவாக நடித்தார்.
மலையாளத்தில் ஹிட் அடித்த ‘ஜோசப்’ திரைப்பத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகவுள்ளது. இப்படத்தில் ஜோஜு ஜார்ஜ் ஹீரோவாக நடித்திருந்தார்.
பாலா இயக்கும் இப்படத்தின் ரீமேக்கிற்கும் ‘ஜோசப்’ என்றே தலைப்பு வைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தை பாலாவே தயாரிக்கவுள்ளார்.
இயக்குனராக களம் இறங்கும் யூகிசேது…. புதிய பட அறிவிப்பு…
இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற நவம்பர் மாதம் துவங்கவுள்ளது. இப்படத்தை அடுத்த வருடம் மார்ச் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது