தனுஷின் D50 திரைப்படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை நடித்து மாபெரும் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் தனுஷ். ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவர் வாத்தி படத்தின் வரவேற்பை தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து வரிசையாக பல படங்களை கமிட் செய்து வைத்திருக்கும் நடிகர் தனுஷ் அவரது ஐம்பதாவது திரைப்படத்தை அவரே இயக்கி நடிக்க இருக்கிறார். இது குறித்த அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில் படம் தொடர்பான லேட்டஸ்ட் தகவல்கள் இணையத்தில் அவ்வப்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

அதாவது, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் தனுஷ் இயக்கி நடிக்க இருக்கும் ‘டி 50’ திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா, சுதீப் கிஷன், விஷ்ணு விஷால், துஷாரா விஜயன், காளிதாஸ் உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்பான அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.

அதன்படி, ‘டி 50’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை இறுதியில் இருந்து தொடங்க இருப்பதாகவும் இதற்கான பணிகளை படக்குழு வடசென்னை பகுதிகளில் மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த பிறகு தனுஷ் இப்படத்தில் இணைவார் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.