இன்றும் கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
Corona Virus Update in Tamilnadu : சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் உலகம் முழுவதும் அதிவேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இதன் தாக்கம் வேகம் எடுத்துள்ளது.
அதிலும் தமிழகத்தில் நேற்று வரை மட்டுமே 411 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இன்று மேலும் 74 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்தறை தெரிவித்துள்ளது.
இதன் மூலம் பாதிக்கப்பட்டவரின் மொத்த எண்ணிக்கை 485 ஆக உயர்ந்தது. இதுவரை தமிழகத்தில் கொரானாவால் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் இன்று உறுதி செய்யப்பட்ட 74 பேரில் 73 பேர் நிஜாமுதீன் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.