ஆவலுடன் காத்திருந்த விஜய்காந்த் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் பிரேமலதா விஜயகாந்த்.

Clarification On Vijayakant Re-entry in Tamil Cinema : தமிழ் சினிமாவில் மிகப் பெரிய நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். அதன் பிறகு தமிழக அரசியலில் ஈடுபடத் தொடங்கிய இவர் ஆரம்பத்தில் சிறப்பாக செயலாற்றி வந்தார். அதன்பிறகு உடல்நிலை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட விஜயகாந்த் வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார்.

பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவருடைய மகன் கட்சியை வழி நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகவுள்ள மழை பிடிக்காத மனிதன் என்ற படத்தில் விஜய் தான் நடிக்க இருப்பதாக சில நாட்களுக்கு முன்னர் தகவல் வெளியானது.

இதனால் ஒட்டுமொத்த விஜயகாந்த் ரசிகர்களும் உற்சாகம் அடைந்தனர். பல வருடங்களுக்குப் பிறகு விஜயகாந்த் அவர்களை எண்ணி திரையில் பார்க்க ஆசைப் பட்டனர். இந்தநிலையில் பிரேமலதா விஜயகாந்த் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வெள்ளித்திரையில் நடிக்க இருப்பதாக வெளியான தகவல் முற்றிலும் பொய். அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை என கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

நாளைய மேட்ச் : டோனியின் சாதனையை முறியடிக்கிறார் ரிஷப் பண்ட்?

இதனால் விஜயகாந்தை மீண்டும் வெள்ளித்திரையில் பார்க்க ஆவலோடு காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

அவர் பேரை சொல்ல என் நாக்குக்கே தகுதி இல்ல Actor Ravi Mariya Speech | k.balachandhar 7th anniversary