மயிலை பாலாஜி நகரை சேர்ந்தவர் மேகநாதன், மளிகைக்கடை நடத்தி வருபவர். இவர் நெல்லை புஷ்கர விழாவிற்கு சென்று விட்டு இன்று காலை வீடு திரும்பினார்.
அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதைக் கண்டு மேகநாதன் அதிர்ச்சி அடைந்தார். பிறகு உள்ளே சென்று பார்த்தபோது, 35000 ரூபாய் பணம், சேமித்து வைத்த 5 மற்றும் 10 ரூபாய் நாணயங்கள், சிகரெட், மளிகை சாமான் பொருட்கள் போன்ற அனைத்தும் திருடு போய் இருந்தது.
ஆனால், துணியில் சுற்றி வைக்கப்பட்டிருந்த 50 சவரன் நகையை மட்டும் கொள்ளையர்கள் எடுத்து செல்லவில்லை. இதைதொடர்ந்து, போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.