Chennai Today will be Blowing Up :
சென்னை: சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரில் இன்று அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே மக்கள் இன்று அதிகமாக வெளியில் செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டு உள்ளது.
நேற்று சென்னை உட்பட 15 மாவட்டங்களில் வெயில் 100 சதத்தை தாண்டி பதிவாகி இருந்தது.
தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு.!!
மேலும் தமிழகத்தில் நிலவும் வெப்ப சலனம் காரணமாக 9 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும், அடுத்த 2 நாட்களில் சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து நிலவி வரும் இந்த வெப்பம் காரணமாக பொதுமக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது என கருத்து தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, இந்த மாதத்தில் 113 டிகிரி வரை அதிகபட்சமாக வெயில் உச்சம் அடைந்துள்ளது.
சூப்பர் ஸ்டார் இயக்குநருடன் இணையும் தளபதி வில்லன் – மாஸ் தகவல்!
தற்போது படிப்படியாக வெப்பம் குறைந்து வந்தாலும், வெப்பத்தின் தாக்கம் அப்படியேதான் நீடிக்கிறது என்பது குறிப்பிடதக்கது.
திருவண்ணாமலை மாவட்டம் பொறுத்தவரையில் அதிகபட்சமாக வேலூர்- இல் நேற்று 110 டிகிரி வெயில் கொளுத்தியது.
இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரில் இன்று அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் வெப்பச்சலனம் காரணமாக வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் கரூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.