Tamilnadu Weather : சென்னை: தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் தமிழகத்தின் வடக்கு உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதை தொடர்ந்து வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இன்று அனல் காற்று வீசும் என்பது கூடுதல் தகவல்.
இந்நிலையில் நாளை முதல் அனல் காற்றின் தாக்கம் படிப்படியாக குறையும் எனவும் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் திருப்பூரில் 5 செ.மீ. மழை, தேனி மாவட்டம் மஞ்சளாறு பகுதியில் 4 செ.மீ., நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 3 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது குறிப்பிடதக்கது.,