கேப்டன் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது தேமுதிக தொண்டர்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
Captain Vijayakanth Admitted in Hospital : தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் அரசியல் தலைவராகவும் வலம் வருபவர் கேப்டன் விஜயகாந்த். கடந்த சில வருடங்களாக உடல்நலக் குறைபாடு காரணமாக வீட்டில் இருந்து வரும் இவர் வழக்கமான மருத்துவ சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைக்கு சென்ற போது கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் வீடு திரும்பினார்.
இந்த நிலையில் தற்போது கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நள்ளிரவில் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீரென உடல்நலக் குறைபாடு ஏற்பட்டதன் காரணமாக இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் விஜயகாந்த் ரசிகர்கள், தேமுதிக தொண்டர்கள் என பலரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.