வனிதாவை காப்பாற்ற பிக் பாஸ் போட்ட பிளான் வெட்ட வெளிச்சமாகி ரசிகர்களை விமர்சிக்க வைத்துள்ளது.
Bigg Boss Plan : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது நடந்து வருகிறது. இந்த சீசனில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இதில் ஒட்டு மொத்த ரசிகர்களின் வெறுப்பையும் பெற்றிருப்பவர் வனிதா தான்.
யாரையும் பேச விடாமல் அனைவரையும் அடக்கி ஆள நினைக்கும் இவருடைய எண்ணம் அனைவருக்குமே எரிச்சலை தான் ஏற்படுத்தி வருகிறது.
இந்த வார நாமினேஷனில் இடம் பெற்றுள்ள இவரை எப்படியாவது வெளியேற்றியே ஆக வேண்டும் என ரசிகர்கள் கங்கணம் கட்டி கொண்டு இருக்கின்றனர். ஆனால் பிக் பாஸ் வனிதாவை காப்பாறுவதற்காக வேளையில் இறங்கியுள்ளார்.
இந்த வாரம் நடந்து முடிந்த கொலையாளி டாஸ்கில் வனிதா சிறப்பாக ஆடியதாக கூறி அடுத்த வார தலைவர் போட்டியில் போட்டியிடலாம் என கூறி விட்டார்.
அவருடன் மோகன் வைத்யாவும் ஷாக்ஷியும் போட்டியிட உள்ளனர். இதனை பிக் பாஸ் அறிவித்ததும் மோகன் வைத்யாவிற்கு அடுத்த வாரம் தலைவராகி விட்டால் நாமினேட் செய்ய மாட்டார்கள் என அப்படியொரு ஆனந்தப்பட்டார்.
அஞ்சலியை துரத்தி துரத்தி காதலிக்கும் யோகி பாபு – இந்த விசியம் உங்களுக்கு தெரியுமா பாஸ்?
பாவம் அவர்க்கு தெரியவில்லை, இந்த வாரம் பிக் பாஸ் உங்களை தான் வெளியேற்றப்போகிறார் என்று.
பிக் பாஸின் கணக்கு படி இந்த வாரம் மோகன் வைத்யா வெளியேறுவார். வனிதா காப்பாற்றப்படுவார்.
அடுத்த வாரம் வனிதா தலைவராக்கப்படுவார், இதனால் அவரை நாமினேட் செய்ய முடியாது என்பதால் அவரை எலிமினேட்டும் செய்ய முடியாது.
பிக் பாஸின் இந்த சூழ்ச்சியை புரிந்து கொண்டவர்கள் உங்க ஸ்கிரிப்ட் ரொம்ப நல்லா இருக்கு பாஸ் என கடும் விமர்சனம் செய்ய தொடங்கியுள்ளனர்.