கண்ணம்மா தப்பே செய்யாதவ என்பதை உணர்ந்து கொள்கிறார் பாரதி.
Bharathi Kannamma Episode Update 21.09.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல் பாரதி கண்ணம்மா. பாரதி மருத்துவமனையில் ஒரு ஒருவரை கவனித்துக் கொண்டிருக்கிறார். அப்போது அம்மா போன் செய்து அம்மா வேண்டும் என கேட்கிறார்.
இதை ஏற்றுக்கொள்ள முடியாது, ஐசிசி வரட்டும் : இன்சமாம் வலியுறுத்தல்
அதன் பிறகு பாரதியின் எதிரில் இருந்த பெண் தன்னுடைய அண்ணன் அண்ணியின் மீது சந்தேகப்பட்டு அவரின் குழந்தைக்கு நான்தான் அப்பா இல்லை என கூறுகிறார். வீட்டிலுள்ள அத்தனை பேரும் எங்கள் அண்ணியின் பக்கம் தான் இருக்கிறோம். ஆனால் அண்ணன் மட்டும் எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் அவர்கள் மீது சந்தேகப்பட்டு சித்திரவதை செய்கிறார். அவனுடைய சந்தேகமின்றி ஐசியூ வரைக்கும் கொண்டு வந்து விட்டுள்ளது என கூறுகிறார்.
இந்தப் பெண் கூறியது அனைத்தும் பாரதியும் வாழ்க்கையோடு ஒன்றி போவதால் பாரதிகண்ணம்மா தப்பு செய்யாமல் நாமதான் சந்தேகப்பட்டு இப்படி செய்கிறோமோ என்ற எண்ணம் எழுகிறது. இதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருக்கிறார்.
இன்னொருபுறம் பரிகாரம் செய்வதற்காக கோவிலுக்கு செல்கிறார். அங்கேயும் பரிகாரம் எல்லாம் வேண்டாம் என கூறுகிறார் அகிலன். அதைப் பின்னர் தன்னுடைய புதிதாக இந்த பரிகாரத்தை தான் செய்வதாக கூறி பரிகாரத்தை செய்யத் தொடங்குகிறார் அகிலன்.
மேடையில் கண் கலங்கிய அழுத நடிகர்! – ஆறுதல் கூறிய Shakeela
இன்னொருபுறம் பாரதி யோசனையில் இருக்கும் சமயத்தில் வெண்பா உள்ளே வருகிறார். என்ன ஏது என கேட்க கண்ணம்மா மேல தப்பு இல்லையோ நான்தான் அவளை சந்தேகப்படுறேனோ எனப் பேசுகிறார். இத்தனை வருஷமா எல்லாரும் கண்ணம்மா பக்கம் தான் இருக்காங்க என் பக்கம் யாரும் இல்ல. கண்ணம்மா இதுவரைக்கும் யார் கிட்டயும் உதவின்னு கேட்டு நிக்கல தனியாளா நின்னு சாதித்து கிட்டு இருக்கா என கண்ணம்மாவை புகழ்ந்து பேசி வருகிறார். இதனால் வெண்பா இனி என்ன செய்வது என யோசிக்க தொடங்குகிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்.