கண்ணம்மாவிடம் சண்டை போட்ட பாரதி கடைசியில் பல்பு வாங்கி உள்ளார்.

Bharathi Kannamma Episode Update 20.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. பாரதி ஹாஸ்பிடலுக்கு போகும் அவசரத்தில் சத்தம் போட கையில் வைத்திருந்த சூடான உணவை கால்மீது கொட்டிக் கொள்கிறார் கண்ணம்மா. இதனால் பாரதி அவரை அமர வைத்து துடைத்துவிட்டு மன்னிப்பு கேட்கிறார். பிறகு சரி இருங்க இட்லி கொண்டு வரேன் என கண்ணம்மா சொல்ல வேண்டாம் நான் கேண்டீன்ல சாப்பிடுகிறேன் எனக் கூறுகிறார். நீ என்ன பண்ணுவ என கேட்க நான் பார்த்துக்கிறேன் என கண்ணம்மா சொன்னதும் அவர் கிளம்புகிறார். இதையெல்லாம் மறைந்திருந்து பார்த்த கண்ணம்மாவின் அப்பாவும் பாரதியின் அம்மாவும் சிரித்து மகிழ்கின்றனர்.

சபரியில் 26-ந்தேதி மண்டல பூஜை விழா : பக்தர்கள் வருகை அதிகரிப்பு

பின்னர் பாரதி கிளம்பியதும் உள்ளே வந்து கண்ணம்மாவிடம் நலம் விசாரித்து அவர்களும் கிளம்புகின்றனர். இதென்ன கீழே கொட்டி கிடக்கு சண்டையா என கேட்க அதெல்லாம் ஒன்றுமில்லை. அவரை எப்படி டீல் பண்ணனும் னு எனக்கு தெரியும் நான் பார்த்துக்கிறேன் என கூறுகிறார்.

இந்த பக்கம் வெண்பாவை வெளியே எடுக்க முடியவில்லை என கூறி வக்கீல் மேலும் ஒரு லட்சம் பணம் கேட்கிறார். கையில் பணமில்லாத காரணத்தினால் மோதிரம் மற்றும் தங்க செயினை கழற்றி கொடுத்தார் சாந்தி. இது முறை கண்டிப்பாக வெளியே கொண்டு வந்து விடுகிறேன் என வக்கீல் கூறுகிறார்.

இந்த பக்கம் ஹேமாவும் லட்சுமியும் அஞ்சலியின் குழந்தையோடு சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருக்கின்றனர். பிறகு அவர்கள் உள்ளே சென்றதும் சௌந்தர்யாவும் அவரது கணவரும் 3 பேர பசங்களும் நம்மளோட இருப்பது சந்தோஷமாக இருக்கு என கூறுகிறார். பாரதியும் கண்ணம்மாவும் இன்னும் சந்தோஷம் முழுசாய் இருந்திருக்கும் என வேணு கூறுகிறார்.

2 வருஷமா இந்த இடத்துக்கு வரணும்னு ஆசை பட்டேன் – VishnuVishal Speech

இந்த பக்கம் கண்ணம்மா துணி அயர்ன் பண்ணி கொண்டிருக்க அந்த நேரத்தில் பாரதி உள்ளே வருகிறார். ஆரம்பத்தில் கொஞ்சம் இருவரும் நன்றாக பேசி கொண்டிருந்த நேரத்தில் பாரதி அவர் துணிகள் அயன் செய்து வைத்திருப்பதை பார்த்து கடுப்பாகிறார். கண்ணம்மா தான் அயன் செய்து வைத்தார் என நினைத்துக்கொண்டு என்னுடைய துணியை நீ எதுக்கு தொட்ட இப்ப என்ன பண்றேன் பாருனு துணிகளை தூக்கி வீசி காலில் போட்டு மிதிக்கிறார். கண்ணம்மா ஒரு நிமிஷம் சொல்றதைக் கேளுங்க என சொல்லியும் பாரதி எதையும் கேட்காமல் கடுமையாக நடந்து கொள்கிறார். அப்படியே வந்து ஒட்டிக்கலாம்னு பார்க்கறியா எனத் திட்டுகிறார்.

இந்த நேரத்தில் வாய்தா வடிவுக்கரசி கண்ணம்மா துணி துவைக்க கொடுத்திருந்த மீதி காசு என கொடுக்கிறார். துணி எல்லாம் கலைந்து போய் இருப்பதை பார்த்து என்ன என கேட்க கண்ணம்மா நடந்ததை கூறுகிறார். பிறகு கண்ணம்மாவும் வாய்தா வடிவுக்கரசியும் பாரதிக்கு அட்வைஸ் கூறுகின்றனர். பிறகு பாரதி ரூமுக்கு செல்ல அவரை தடுத்து நிறுத்துகிறார் கண்ணம்மா.

இதெல்லாம் யாரு எடுத்து மடித்து வைப்பா என சொல்ல பாரதி என் தலையெழுத்து நானே எழுதுகிறேன் என துணிகளை எடுக்கிறார். பிறகு அவர் உள்ளே சென்றதும் கண்ணம்மா சிரிக்கிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.