லக்ஷ்மியை பார்க்க போன கண்ணம்மாவுக்கு அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.

Bharathi Kannamma Episode Update 07.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. ஹேமாவை பார்ப்பதற்காக பாரதி நடு இரவில் வீட்டிற்கு கிளம்பினார். கண்ணம்மா விடும் ஒரு வார்த்தைகூட சொல்லாமல் அவர் கிளம்பிய நிலையில் லஷ்மியின் ஞாபகம் வந்து கண்ணம்மாவும் பாரதி வீட்டுக்கு கிளம்பினார். அவரும் பாரதி தூங்கட்டும் என வீட்டிற்கு கிளம்பி விட்டார்.

இன்று கனமழை பொழியும் மாவட்டங்கள் : ஆய்வு மையம் தகவல்

பாரதி வீட்டில் ஹேமா பக்கத்தில் பாரதி அமர்ந்து கொண்டு வீட்டுக்கு வந்த கண்ணம்மா சவுந்தர்யாவுக்கு போன் செய்து கொஞ்சம் கதவை திறக்குமாறு சொல்கிறார். கதவைத் திறந்த சௌந்தர்யா இந்த நேரத்தில் இங்கு வந்த என கேட்க லட்சுமி ஞாபகமா இருந்தது அது தான் பார்த்துட்டு போகலாம்னு வந்தேன் என கூறுகிறார். அவ இங்க எனக்கேட்க அவர் தூங்கிட்டு இருந்தா நான் சொல்லாம வந்துட்டேன். பார்த்துவிட்டு உடனே போயிடலாம்னு அவரிடம் சொல்லல என கூறுகிறார். மதியம் தானே ஸ்கூல்ல பார்த்த விடிஞ்சா ஸ்கூல்ல பார்க்க போற அதுவரைக்கும் உன்னால பொறுமையா இருக்க முடியாதா? ஒரே நாள் பொண்ணு பிரிஞ்சு இருக்க முடியல, ஆறு மாதத்தை எப்படித்தான் ஓட்ட போறியோ என சொல்கிறார். சரி இரண்டு குழந்தைகளும் ஒரே ரூம்ல தான் தூங்கிட்டு இருக்காங்க. அவங்கள டிஸ்டர்ப் பண்ணாம பார்த்துட்டு கிளம்பிடு என வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். லட்சுமி பார்க்க மேலே சென்ற கண்ணம்மாவுக்கு எதிர்பாராத அதிர்ச்சி. அவருக்கு முன்பாக பாரதி அந்த இடத்தில் இருக்கிறார்.

கண்ணம்மாவை பார்த்து ஷாக்கான பாரதி நீ எதுக்கு இங்க வந்த என கேட்கிறார். நீங்க எதுக்கு வந்தீர்களோ அதுக்கு தான் நானும் வந்தேன் என கூறுகிறார். இருவரும் பேசிக் கொண்டிருந்த சத்தம் கேட்டு சௌந்தர்யா மேலே வந்து பாரதி நீ எப்படா வந்த எப்படி வந்த என கேட்கிறார். காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து படிக்கட்டு வழியே மேலே வந்தேன் எனக் கூறுகிறார். வந்து உடனே போயிடலாம்னு தான் போன் பண்ணல என சொல்கிறார். சொந்த வீட்டுக்கு திருட்டுத்தனமா வரையா ஒரு போன் பண்ணி இருக்கலாம்ல என சௌந்தர்யா சொல்கிறார்.

Birthday Celebration Of Thieyash Sai & Shaviya Sai – S/O Manager To Vishal! 

பிறகு சரி இரண்டு பேரும் அவங்களை எழுப்பிவிட்டு விடாமல் விட்டு சீக்கிரம் கிளம்புங்க என கூறுகிறார். நீங்க என்னமா என்ன விரட்டுறதிலேயே இருக்கீங்க என பாரதி கேட்க அப்போ அவங்க எழுந்ததும் உங்ககிட்ட பதில் சொல்ல சக்தி இருக்கா நான் வேணா எழுப்பி விடவா என கேட்கிறார்? இரண்டு பேரும் ஒன்னா ஸ்கூலுக்கு போனதால 100 கேள்வி கேட்டாங்க என கூறுகிறார். பிறகு நான் கீழ வெயிட் பண்றேன் சீக்கிரம் பார்த்துட்டு வாங்க என சௌந்தர்யா கீழே சென்று விடுகிறார். உடனே ஆட்டோ டிரைவருக்கு போன் செய்து நீ கிளம்பு கண்ணம்மா பாரதி கூட்டிட்டு வருவான் என கூறுகிறார். ஆட்டோ டிரைவரும் நான் கண்ணம்மாவிடம் ஏதாவது சொல்லி சமாளித்து கொள்கிறேன் என கிளம்பிவிடுகிறார்.

குழந்தையைப் பார்த்துவிட்டு இருவரும் வெளியே வருகின்றனர். வெளியே வந்து பார்த்தால் கண்ணம்மாவின் ஆட்டோ காணவில்லை. அவர் ஆட்டோ டிரைவர் அண்ணாவுக்கு போன் செய்ய அவர் பக்கத்து வீட்டு பொண்ணுக்கு பிரசவம்னு கூப்பிட்டாங்க ஹாஸ்பிடலுக்கு வந்துவிட்டேன் என கூறுகிறார். பிறகு சௌந்தர்யா சரி இவனோட கார்ல போயிடு என கூறுகிறார். பாரதி அதெல்லாம் முடியாது அவளை வந்த மாதிரி வர சொல்லுங்க என கூறுகிறார். பிறகு கண்ணம்மா விடுங்க அத்தை நான் கேப் புக் பண்ணி போய்க்கிறேன் என மொபைல் எடுத்து செக் பண்ண பக்கத்தில் எதுவும் கேப் இல்லை. திரும்பவும் பாரதியிடம் சௌந்தர்யா சொல்ல அவர் மறுக்கிறார். நீ என்னடா கார்ல கூட்டிட்டு பார்த்து நல்ல அவளோடு சேர்ந்து வாழ்ந்துடுவோம்னு பயப்படுறியா என கூறுகிறார். பிறகு சரி வர சொல்லுங்க என பாரதி கிளம்புகிறார்.

கண்ணம்மா பின்பக்கம் போய் ஏற முயற்சி செய்ய உடனே ஓடிப் போன சௌந்தர்யா நீ என்ன அவனே கார் டிரைவர் நினைச்சியா என் பையன் டாக்டர் டி போய் முன்னாடி உட்காரு என முன்பக்க சீட்டில் அமர வைக்கிறார். பிறகு பாரதி எல்லாம் என் தலையெழுத்து என காரில் ஏறி கிளம்புகிறார். இப்படி பாதியிலேயே விட்டு போயிட்டீங்க என கண்ணம்மா கேட்க என்ன சொன்ன தூங்கிட்டு இருக்கும்போது எழுப்பி ஒரு வார்த்தை சொல்லிட்டு போய் இருக்கலாம்ல என கூறுகிறார். ஏன் நீ தானே வந்த என்னை எழுப்பி ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்து இருக்கலாம்ல என பாரதி திருப்பிக் கேட்கிறார். நீ பண்ணா சரி நான் பண்ண தப்பா என கேட்கிறார். பிறகு கண்ணம்மா ஒரே வீட்டில் வாழ்கிறோம் ஒருத்தர ஒருத்தர் எங்க போற எங்க வரணம்னு சொல்லிக்கணும்ல என கூறுகிறார். உடனே பாரதி வாழல இருக்கிறோம். அதை நான் லாட்ஜ் மாதிரி தான் பார்க்கிறேன் என கூறுகிறார்.

பிறகு பாரதி பாட்டு ஒன்றை போட அது காதல் பாடலாக ஒலிக்கிறது. பாடலை கண்ணம்மா ரசிக்க அதனை நிறுத்தி விடுகிறார். கண்ணம்மா நல்லாதானே இருக்கு என திரும்பவும் போடுகிறார். திரும்பவும் பாரதி நிறுத்திவிடுகிறார். இது என் காரு எனக்கு பிடிக்கல என சொல்கிறார். பிறகு பாரதி வீட்டுக்கு போகாமல் நேராக வேறு ஒரு இடத்திற்கு காரை விடுகிறார். வீட்டுக்கு போற வழி இது இல்ல எங்க போறீங்க என கண்ணம்மா கேட்க கொஞ்சம் வாயை மூடிட்டு வரையா. உனக்கு கண்ணம்மா என்று பெயர் வைத்ததுக்கு பதில் வாயம்மானு பெயர் வைத்திருக்கலாம். தொணதொணனு பேசிட்டே இருக்க என காரை நிறுத்துகிறார். சரி வா மோர் குடிக்கலாம் என கண்ணம்மாவை கூப்பிட அவர் எனக்கு வேண்டாம் என சொல்லி விடுகிறார்.

மோர் கடைக்கு போன பாரதி மோர் கேட்கிறார். மோர் தாத்தா அது யாரு உங்க சம்சாரமா என கேட்க கண்ணம்மா குஷி ஆகி விடுகிறார். பிறகு பாரதி கண்ணம்மா வெறுப்பேற்றி கொண்டே மோரை ருசித்து ருசித்து குடிக்கிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.