குழந்தை மட்டும் வேணாம்னு சொல்லிடாதே என செழியனிடம் அடம் பிடிக்கிறார் ஜெனி.
Baakiyalakshmi Serial Episode Update 17.09.21 : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. சாப்பாடு கொடுக்க போன இடத்தில் பாக்கிய அவங்க வீட்டு பெண்மணி அழைத்து சமையல் சூப்பராக இருக்கிறது என பாராட்டினார். தனக்கு கிடைத்த பாராட்டை எண்ணி பாக்கியா செல்வியிடம் கூறி சந்தோஷப் பட்டுக் கொள்கிறார். உங்க வீட்டில இருக்காங்க சாம்பார் நல்லா இருக்கு சட்னி நல்லா இருக்குன்னு கூட சொல்ல மாட்டாங்க என கூறுகிறார்.
தமிழகத்தில், வியாபாரிகள்போல பயங்கரவாதிகள் சதித்திட்டம் : உளவுத்துறை எச்சரிக்கை
வீட்டில் எல்லாம் எடுப்பதைப் பார்த்த அவரது பாட்டி அவரை அழைத்து வந்து ஆறுதல் கூறுகிறார். இப்படித்தான் இருக்கணும் அடிக்கடி கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிட வாந்தி வராது. ஆனா சாப்பிட்டுக்கிட்டே இருக்கணும் அப்பதான் ஆரோக்கியமாக இருக்க முடியும் என அறிவுரை கூறுகிறார். இதுவரைக்கும் தன்னை திட்டித் தீர்க்க வந்த பாட்டி தற்போது அக்கறையாக இருப்பது ஜெனிக்கு மிகவும் பிடித்து போக செழியன் இடம் சென்று எனக்கு இந்த குழந்தை வேண்டும். குழந்தை மேல எல்லாரும் அவ்வளவு ஆசையா இருக்காங்க. இந்த குழந்தையை மட்டும் வேணாம்னு சொல்லி விடாதே என கூறுகிறார்.
பாட்டி ஜெனி மீது காட்டும் அக்கறையை பற்றி செல்வி இது உன் மேல காட்டுற அக்கறை இல்லை உன் குழந்தை மேல காட்டுற அக்கறை நீ தப்பா நினைச்சுக்காத என கிண்டலாக கூறுகிறார். இதனால் பாட்டி செல்வியை திட்டுகிறார்.
எனக்கு விஜய்க்கும் சண்டை உண்மைதான் – மேடையில் ஆவேச பட்ட Vijay-யின் தந்தை!
அதன் பின்னர் ஏறி வீட்டுக்கு வர சாப்பாடு கற்றுக் கொடுப்பதற்கான பொருட்கள் வேண்டும் என கூறியதால் பாக்கியாவை கடைக்கு அழைத்துச் செல்கிறார். அப்போது அமிர்தாவின் அப்பா அங்கு வருகிறார். இருவரையும் பார்த்த அவர் வீட்டிற்கு அழைத்து செல்கிறார். வீட்டிற்குப் போன பாக்கியா எல்லோரிடமும் நலம் விசாரிக்கிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட்.