எழிலுக்கு அமிர்தா எதிர்பாராத சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
Baakiyalakshmi Serial Episode Update 16.11.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. அமிர்தா வீட்டுக்குப் போன எனில் அவருடைய அம்மாவுடன் பேசிக் கொண்டிருக்க அப்போது அமிர்தா எனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்குன்னு சொன்னீங்களே என்ன என்று கேட்கிறார். இருக்குங்க ஆனா இப்போ இல்ல இன்னைக்கு கண்டிப்பா இருக்கு என கூறுகிறார். அமிர்தாவின் அம்மா எழில் சொன்னா கண்டிப்பா செய்வான். பெரிய சர்ப்ரைசாக இருக்கும் என கூறுகிறார்.
இந்த நேரத்தில் ரூமிற்குள் குழந்தை அழும் சத்தம் கேட்கிறது. அமிர்தா உள்ளே சென்று குழந்தையை தூக்கிக்கொண்டு வெளியே வருகிறார். குழந்தையை பார்த்ததும் எழில் குழந்தை அழகாக இருக்கு யாருடைய குழந்தை என கேட்க அவருடைய அப்பா அமிர்தாவோட குழந்தை. அமிர்தா இங்க படிக்கவே அவங்க அம்மாகிட்ட குழந்தை இருந்தது என கூறுகிறார்.
ரூ.22,500 கோடியில் 341 கி்.மீ. நீள நெடுஞ்சாலை திறப்பு : பிரதமர் மோடி உ.பி. பயணம்
கைக்குழந்தையை ஊர்ல விட்டுட்டு இவருக்கு இங்கே என்ன வேலை என்று தப்பா பேசுவாங்க நான் தான் இதுவரைக்கும் யாரிடமும் சொல்லல என கூறுகிறார். உண்மையை கேட்டதும் அதிர்ச்சி அடைகிறார். பிறகு நான் சொன்ன சர்ப்ரைஸ் இதுதான். இதுதான் என்னோட பொண்ணு என அமிர்தா கூறுகிறார்.
பிறகு எழில் அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் வீட்டிற்கு கிளம்புகிறார். பிறகு தன் வாங்கிய கிப்ட் அமிர்தாவிடம் கொடுத்து வாழ்த்து கூறி விட்டு வீட்டிற்கு வருகிறார். வீட்டிற்கு வந்த எழில் இதே அதிர்ச்சியில் இருக்கிறார். இதனை கவனித்த பாக்கியா என்னாச்சு என கேட்கிறார். எழில் ஆபீசில் ஒரு சின்ன பிரச்சனை. இப்போ சரி ஆகிடுச்சு. ஆனா இன்னும் முழுசா சரியாகலை. அத பத்தி யோசிச்சு யோசிச்சு டென்ஷனா இருக்கு என கூறுகிறார்.
அமைதியா அது பற்றி யோசிக்காமல் விடு அதற்கு பதில் கிடைக்கும் என பாக்கியா கூறுகிறார். அப்படியா அவர் சொல்ற என கேட்கிறார். பிறகு எழில் மொட்டை மாடியில் நடந்ததைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்க அவரைப் பார்க்க நண்பர் சதீஷ் வருகிறார். பாக்யா சதீஷ் நலம் விசாரித்து ஏறி மேலே தான் இருக்கிறான் பேசிவிட்டு ரெண்டு பேரும் கீழே வாங்க சாப்பிடலாம் என கூறுகிறார். பிறகு மேலே போன சதீஷ் எழிலிடம் பேச எழில் நடந்ததைக் கூற அவரும் அதிர்ச்சி அடைகிறார். நீ அமிர்தாவிடம் ப்ரபோஸ் செய்யாததே நல்லது. இதை இப்படியே விட்டுடு. ஃப்ரண்டா மட்டுமே இருந்துட்டு போயிடுவோம். சரி நான் கீழே போறேன் நீ வா சாப்பிட்டு தூங்கி ரெஸ்ட் எடு நாளைக்கு வேலையை பார்க்கலாம் என கூறுகிறார்.
Ajith உடன் மூன்றாவது முறையாக இணையும் பிரபல இயக்குனர் – Massive Update.!
பிறகு வீட்டில் பாக்கியா, கோபி, இனியா மற்றும் ஈஸ்வரி ஆகியோர் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். இனியா எனக்கு ஒரு வாரம் லீவு வெளியே எங்கேயாவது போகலாமா என கேட்கிறார். ஈஸ்வரி ஊருக்கு போகலாம் என கூறுகிறார். பாக்கியா உங்களுக்குத்தான் ஊரு பிடிக்காது என கேட்க உங்க மாமாதான் அங்க போய் உட்கார்ந்துட்டு இருக்காரு அதுதான் அவர் என்ன பண்றாருனு போய் பார்க்கலாம் என சொல்கிறார். கோபி எனக்கு லீவு இல்ல மா என சொல்கிறார். உங்க அப்பாவுக்கு போன் பண்ணி எப்ப வருவாருன்னு கேளு என கூறுகிறார். தீபாவளிக்கு இன்னும் நாள் இருக்குல வருவாரு என கூறுகிறார். பிறகு இனியா தீபாவளிக்கு எப்போ டிரஸ் எடுக்க போகிறோம் என கேட்க அம்மாவை கூட்டிட்டு போ என கூறுகிறார். அம்மா வேண்டாம் நான் ஆசைப்பட்டது எடுக்க விட மாட்டாங்க என கூறுகிறார். பாக்கியா கூட்டிட்டு போயிட்டு இனியாவுக்கு பிடித்ததை எடுத்து கொடு போகும்போது பணம் வாங்கிட்டு போ என கூறுகிறார். பாக்கியாவும் சரி என கூறுகிறார். இத்துடன் ஓடுகிறது இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட்.