பணமில்லாமல் தவிக்கும் கோபிக்கு உதவி செய்ய போன பாக்கியாவை அவர் திட்டியுள்ளார்.
Baakiyalakshmi Serial Episode Update 13.09.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. கோபியின் அம்மாவும் அப்பாவும் சமாளிக்க கொண்டிருக்க பாக்யா காப்பி எடுத்து வந்து கொடுக்கிறார். அதன் பின்னர் கோபியும் வந்து அமர அவருக்கும் காபி கொடுக்கிறார். பாக்கியா ஷூ சாக்ஸ் எடுத்துட்டு வா கர்ட்சிப் எடுத்துட்டு வா என பாக்யாவை தொடர்ந்து வேலை வாங்குகிறார். நேத்து என்னவோ பாக்கியாவை வீட்டை விட்டு வெளியே போக சொன்ன இன்னைக்கு அவ இல்லைன்னா இந்த வேலையெல்லாம் உனக்கு யார் செய்வா என கோபியின் அப்பா கேட்கிறார். அதன் பின்னர் கீழே வந்த இனியா அப்பா ஃபீஸ் கட்டணும் இன்னைக்கு லாஸ்ட் டேட் என கூறுகிறார். வேலையில் மறந்துவிட்டேன் இன்னைக்கு கட்டி விடுகிறேன் என சமாளிக்கிறார் கோபி.
அதன் பின்னர் கோபியின் அப்பா பணம் கொடு நான் போய் கட்டி விடுகிறேன் என கூறுகிறார். இல்லப்பா பணம் ஆபீஸுக்குப் போய் தான் ரெடி பண்ணனும் என கூறுகிறார். ஆபீஸுக்கு போன கோபி மேனேஜர் சுரேஷை அழைத்து சத்தம் போடுகிறார். யாரும் வேலை செய்யுறது இல்ல என்னோட அக்கவுண்ட்ல பணம் இல்லை என திட்டி தீர்க்கிறார். இதே நிலைமை போயிட்டு இருந்தா எல்லாரும் வேற வேலையை தேடிக்கங்க என கூறுகிறார்.
இந்தப் பக்கம் அமிர்தா பாக்யாவின் வீட்டிற்கு வருகிறார். அமிர்தாவிடம் செல்வி நடந்ததை கூறுகிறார். எழில் தான் ஹீரோ எழில் இல்லை என்றால் என்னென்னவோ நடந்து இருக்கும் என பாக்யா முதற்கொண்டு அனைவரும் புகழ்ந்து பேசுகின்றனர். அதன் பின்னர் இரவில் அனைவரும் அமர்ந்து கொண்டிருக்கும் போது கோபியிடம் இனியா இன்னைக்கும் பீஸ் கட்டல. ஸ்கூல் குரூப்ல இருந்து மெசேஜ் வந்திருக்கு. நாளைக்கு தான் கடைசி தேதி. பீஸ் கட்டாதவங்களை நிற்க வைத்து கேள்வி கேட்பாங்க. ரொம்ப அசிங்கமா இருக்கும் என கூறுகிறார். நாளைக்கு கண்டிப்பா கட்டி விடுகிறேன் என கோபி கூறுகிறார்.
அதன் பின்னர் மேலே சென்று கோபி தன்னுடைய நண்பனுக்கு போன் செய்து ஆபிசில் ரொம்ப டைட்டா போயிட்டு இருக்கு. ஒரு ஒரு லட்சம் பணம் கிடைக்குமா என கேட்கிறார். அவருடைய நண்பர் இப்போ உடனே கிடைக்காது ஒரு வாரம் கழிச்சு சொல்கிறேன் என கூறி விடுகிறார். சரி நான் வேறு எதையாவது முயற்சி செய்கிறேன் என கோபி போனை வைக்கிறார். கோபி பேசுவதை நின்று கேட்டுக் கொண்டிருந்த பாக்கியா அதன்பின்னர் அவரிடம் சென்று இந்த மாசம் வீட்டிற்கு தரவேண்டிய பணத்தை நீங்கள் தர வேண்டாம். நான் என் கையில் இருப்பதை வைத்து பார்த்துக் கொள்கிறேன் என கூறுகிறார். என்ன பாக்கியா பணம் கொடுக்கலைன்னு குத்தி காட்டுறியா என கோபத்தை காட்டுகிறார் கோபி. இத்துடன் முடிகிறது இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட்.