தற்கொலைக்கு முயன்ற இனியாவின் தோழி விவகாரத்தில் உண்மையை மறைத்துள்ளது பள்ளி நிர்வாகம்.
Baakiyalakshmi Episode Update 29.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கம்ப்யூட்டர் சார் கொடுத்த பாலியல் தொல்லை காரணமாக இனியாவின் தோழி நிகிதா தூக்கிட்டு தற்கொலை முயற்சி செய்கிறார். இந்த தகவலை அறிந்த இனியா வீட்டில் அழுது புலம்பி அவளை பார்க்க வேண்டும் என கூற பாக்கியா இனியாவை அழைத்துக்கொண்டு ஹாஸ்பிடலுக்கு செல்கிறார். அதன் பின்னர் நிகிதா விசாரிக்க யாரும் எதுவும் சொல்லாததால் பிறகு பள்ளிக்குச் செல்கிறார்.
பள்ளியில் பத்திரிக்கையாளர்கள் கூடியிருக்க அப்போது வந்த பிரின்ஸிபள் நிகிதா சுமாராக படிக்கும் பெண். மாடல் எக்ஸாமில் நல்ல மார்க் வாங்கவில்லை என்றால் பப்ளிக் எக்ஸாம் எழுத விடமாட்டோம் என கூறியிருந்தோம். மாடல் எக்ஸாம் சில பேப்பர்களை எழுதாததால் பப்ளிக் எக்ஸாம் எழுத முடியாது என்ற பயத்தினால் அந்தப் பெண் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார் என கூறினார். இதனைக் கேட்ட பாக்கியா இனியா மற்றும் அவரது தோழிகள் அதிர்ச்சி அடைந்தனர். பிரின்ஸ்பல் மேடம் பொய் சொல்றாங்க என கண் கலங்கி அழுதார் இனியா.
அவங்களுக்கு உண்மை தெரிந்து இருக்காது நீங்கதான் அவங்ககிட்ட எதுவுமே சொல்லலையே என பாக்கியா சொல்ல இனியாவும் அப்படியா அம்மா என கேட்கிறார். அதன்பிறகு இனியா இனியாவின் தோழி மற்றும் பாக்கியா மூவரும் பிரின்ஸிபளை பார்க்க செல்கின்றனர். ஆனால் வேறொரு டீச்சர் இவர்களை உள்ளே அனுப்பாமல் வெளியே தடுத்து நிறுத்துகிறார்.
மேடம்க்கு ஒரே பிரஸர், பிஸியா இருக்காங்க என சொல்கிறார். எவ்வளவு நேரமானாலும் வெயிட் பண்ணி பார்த்துட்டு போகிறோம் என பாக்கியா கூறுகிறார். 10 மணிக்கு பிரின்சிபலை பார்க்க காத்திருக்க தொடங்கிய பாக்கியா 12 மணி வரை காத்திருக்கிறார். அதன் பிறகு நாம் கதவைத் திறந்து போய்விடலாம் என பாக்கியா முடிவு செய்து கதவை திறக்க உள்ளே பிரின்ஸிபள் மேடம் இல்லை. அவங்க மீட்டிங் முடிச்சுட்டு வீட்டுக்கு கிளம்பிட்டாங்க என அந்த மிஸ் கூறுகிறார்.
இந்த நேரத்தில் அங்கு வந்த பாக்யாவின் தோழி ஒருவர் மேடம் நிகிதாவை பார்க்க ஹாஸ்பிடலுக்கு சென்று இருப்பதாக கூறுகிறார். பிறகு பாக்கியா இனியாவை அழைத்துக்கொண்டு ஹாஸ்பிடலுக்கு செல்கிறார். அங்கே நிகிதாவின் பெற்றோரிடம் நடந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா என கேட்கிறார். அவர்கள் அமைதியாகவே இருக்க உங்களுக்கு தெரியாதுனு நினைக்கிறேன். இதுக்கு எல்லாம் காரணம் கம்ப்யூட்டர் சார் தான். அவர் மேல கம்ப்லைண்ட் கொடுங்க என கூறுகிறார். எதுக்கு என் பொண்ண பத்தி தப்பு தப்பா எழுதறதுக்கு என அவருடைய பெற்றோர்கள் கேட்டதும் பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
பிறகு ப்ரோமோ வீடியோவில் காட்டப்பட்டது படி பாக்கியா பள்ளிக்குச் சென்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து நடந்த விஷயங்களை சொல்லுவார். இது குறித்த காட்சிகளை அடுத்த எபிசோடில் பார்க்கலாம்.