எங்க அம்மாவுக்கும் கோபி அங்கிளுக்கும் கல்யாணம் என மய்யூ சொன்ன வார்த்தையால் கோபியின் அப்பா அதிரடி முடிவு எடுத்துள்ளார்.

Baakiyalakshmi Episode Update 26.01.22 : கோபி சோபாவில் அமர்ந்து எதையோ யோசித்துக் கொண்டிருக்க அப்போது பாக்கியாவிடம் ஒரு பிளாக் காபி கேட்கிறார். பிறகு பிளாக் காபி எடுத்து வந்து கொடுத்த பாக்கியா ஏங்க என்கிட்ட இருந்து எதையாச்சும் மறைக்கிறீங்களா என கேட்கிறார்? நீங்க முன்ன மாதிரி இல்ல நிறைய மாறிட்டீங்க என கூறுகிறார். அந்த போட்டோ எங்க வெச்ச நீ எனக்கு தெரியாது ஞாபகம் இல்ல ன்னு சொன்னேன்ல இப்ப அந்த போட்டு இருக்கு என்ன அவசியம் என கோபி கோபப்படுகிறார்.

அந்த போட்டோவை நான் எடுத்துட்டேன் என பாக்கியா சொல்ல கோபி அதிர்ச்சி அடைகிறார். எங்க இருந்துச்சி என கோபி கேட்க நீங்க வச்ச இடத்தில தான் இருந்துச்சு என கூறுகிறார். நாங்க பிள்ளைகளோட போட்டோ இங்கே இருக்கருதுல உங்களுக்கு என்ன பிரச்சனை? எதுக்கு அந்த போட்டோ எங்க இருக்க கூடாதுனு நினைக்கிறீங்க என பாக்கியா கேட்க கோபி கோபப்படுகிறார். அதை தேடி எடுத்துட்டல நீயே உனக்கு அவார்டு குடுத்துக்க என திட்டுகிறார். எங்க இருந்தாலும் கேள்வி கேள்வி, ஒரு மனுஷன நிம்மதியா இருக்க விடுறியா என திட்டுகிறார்.

நீங்க முன்ன மாதிரி இல்ல எதையும் நீங்க மறைக்கிறீங்க என பாக்கியா மீண்டும் சொல்ல ஆமாம் மறைக்கிறேன். கள்ள நோட்டு அடிக்கிறேன். கள்ளச்சாராயம் காய்ச்சுறேன் என சத்தம் போட்டு விட்டு மேலே சென்று விடுகிறார்.

மறுநாள் காலையில் கோபியின் அப்பா பாக்கியாவை அழைத்து அந்த போட்டோ எல்லாம் எங்கே என கேட்கிறார். இங்கதான் இருக்கு மாமா என அதை எடுத்துக் கொடுக்க மாட்டிவிடலாம் எடு என கேட்கிறார். ஐயோ வேணாம் மாமா அவருக்குத்தான் அந்த போட்டோ இங்கே இருக்கிறது பிடிக்கலையே என கூறுகிறார். அப்புறம் அவரு திட்டுவாரு என்ன சொல்கிறார். அவன் கெடக்குறான், அவனுக்கெல்லாம் பயப்படாத, எழில் எங்கே என கேட்கிறார்.

எழிலும் அங்கு வந்துவிட அப்போது வந்த இனியா வா அண்ணா மய்யூவை கூட்டி வரலாம் என கூப்பிட்டு செல்கிறார். பிறகு இருவரும் ராதிகா வீட்டுக்குச் சென்று ராதிகாவிடம் பேசி நலம் விசாரித்து விட்டு அங்கிருந்து மய்யூவை கூட்டி வருகின்றனர். மயூ வந்ததும் போட்டோக்களை மறைத்து விடுகிறார் கோபியின் அப்பா. ஏன் போட்டோவை மாட்டி விடலாம் எனக் கேட்டும் இப்போது வேண்டாம் என கூறி விடுகிறார்.

பிறகு மயூவிடம் கோபியின் அப்பா ராதிகா பற்றி கேட்க அம்மா வீட்டில்தான் இருக்காங்க என கூறுகிறார். பாட்டி பற்றி கேட்க பார்ட்டியில் வீட்டில்தான் இருக்காங்க அம்மாவுக்கும் பாட்டிக்கும் தான் அடிக்கடி சண்டை வந்துகிட்டே இருக்கும் என கூறுகிறார். எங்க வீட்டுக்கு ஒரு அங்கிள் வருவார் அவர் வருவது பாட்டிக்கு பிடிக்காது அதனால சண்டை போடுவாங்க என சொல்கிறார். யார் வருவாங்க எனக் கேட்க கோபி அங்கிள் என கூறுகிறார். இனியா எங்க டாடி பேரும் கோபி தான் என சொல்கிறார். பிறகு இப்பவும் அந்த அங்கிள் வந்துட்டு தான் இருக்கிறாரா என கோபியின் அப்பா கேட்க டெய்லி வருவார் என மயூ சொல்கிறார்.

அதன் பிறகு எங்க அம்மாவுக்கு கல்யாணம் எங்க பாட்டிதான் சொன்னாங்க நான் எங்க அம்மாவோட கல்யாணத்தைப் பார்க்க போறேன் என மயூ கூறுகிறார். இனியா என்ன சொல்ற எனக் கேட்க ஆமாம் உண்மையத்தான் சொல்றேன் என சொல்கிறார். யாரோட கல்யாணம் என கோபியின் அப்பா கேட்க அந்த அங்கிளோட தான் என கூறுகிறார். பேர் என்ன என கேட்க கோபி அங்கிள் என சொல்கிறார் மயூ. இதனால் கோபியின் அப்பா அதிர்ச்சி அடைந்து கண் கலங்குகிறார்.

இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து வெளியான புரோமோ வீடியோவில் கோபி மற்றும் பாக்கியா இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை எடுத்து மய்யூவிடம் இந்த அங்கிளை உனக்கு தெரியுமா என கேட்கிறார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.